விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
ஒதுங்கி கிடக்கிற அரசு நிலத்தை குறிக்கும் படத்தில் நடித்த நடிகர்கள் மூன்று பேரும் படப்பிடிப்பின்போது ஒற்றுமையாத்தான் இருந்தாங்களாம். ஆனால் படம் முடிந்த பிறகுதான் ஆளாளாக்கு ஈகோவாக திரியுறாங்களாம். மெயின் ஹீரோவாக நடிச்ச பிரியாணி நடிகர் படத்தோட விளம்பரங்களில் சுமார் மூஞ்சி குமாருக்குதான் அதிக முக்கியத்துவம் இருக்கு, படத்துலேயும் அவர் கேரக்டர்தான் பேசப்படுதுங்றதுல செம காண்டா இருக்காராம். அந்த கடுப்புலதான் படத்தோட புரமோசனை புறக்கணிச்சாராம். இதில் கோபமான தனமான தயாரிப்பாளர் படத்தோட விளம்பரங்களில் நடிகரை புறக்கணிச்சாராம்.
இது ஒரு புறமிருக்க 12பி பஸ் பிடித்து வந்த நடிகர் இவுங்க மோதலை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டு தன்னோட ரூட்டை தனியா போட்டு படத்தோட வெற்றியை தனது கேரியருக்கு யூஸ் பண்ணிக்கிட்டாராம். இவுங்க மோதலை பார்த்த இயக்குனர் இனிமே மல்டி ஹீரோ படம் பக்கமே போகக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்காராம். "தூக்கு தண்டனைய படம் பேசினாலும் இவிங்க கோக்குமாக்கு மட்டும் குறையல" என்கிறான் கோடம்பாக்கத்து ரசிகன்.