ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மூணுஷா நடிகைக்கும் மணியான தயாரிப்பாளருக்கும் நடைபெறுவதாக இருந்த திருமணம், நிச்சயதார்த்தத்துடன் முறிந்து போனது அனைவரும் அறிந்ததே. அந்த முறிவு ஒரு பக்கம் நடக்க, இன்னொரு பக்கம் தன்னுடைய பழைய காதலை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் மூணுஷா இறங்கியிருப்பதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக மூணுஷா நடிகைக்கும், தெலுங்குத் திரையுலகின் பெரிய குடும்பத்து வாரிசான அந்த உயரமான நடிகருக்கும் இடையே காதல் என தமிழ், தெலுங்கு மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. ஆனால், திடீரென நடிகைக்கும் மணியான தயாரிப்பாளருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடக்க அந்த நடிகருடனான காதல் விவகாரம் கானல் நீராகிப் போனது.
இருந்தாலும் சமீபத்தில் தெலுங்குத் திரையுலகில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பரான நடிகரின் மகன் திருமண சங்கீத் விழா, ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு வருகை தந்த தன்னுடைய முன்னாள் காதலருடன் நடிகை மிகவும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தாராம். விழா ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, பல திரையுலகப் பிரபலங்கள் விழாவிற்கு வந்து கொண்டிருந்தாலும் அந்த முன்னாள் காதல் ஜோடி தங்களைச் சுற்றி நடப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் பேசிக் கொண்டேயிருந்தார்களாம். ஆனால், அது நட்பு ரீதியிலான பேச்சு என்றுதான் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்களாம்.