என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
வாகை சூடி வந்தவர் அந்த இனிய நடிகை. அவர் தற்போது பீச்சு பக்கம் என்ற தமிழ், கன்னட மொழியில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். முதல் நாள் பார்ட்டி பங்ஷன்னு போயிட்டு தினமும் படப்பிடிப்புக்கு லேட்டா வந்தாராம் நடிகை. இயக்குனரும், தயாரிப்பாளரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் நடிகை கேட்பதாக இல்லை. ஒரு நாள் திடீர்னு கன்னட ஹீரோ இனிய நடிகை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுக்கணும்னு சொன்னாராம் இயக்குனர். இதுமாதிரி காட்சி பற்றி சொல்லவே இல்லியே என்று நடிகை மறுத்திருக்கிறார். இப்படி எடுத்தால்தான் சீன் நல்லா இருக்கும்னு சொல்லி சம்மதிக்க வச்சாராம் தயாரிப்பாளர்.
சீன் எடுக்கிறப்போ ஹீரோ நிஜமாகவே விட்டராம் பளார். "காட்சி ரியலா இருக்கணும்னு கொஞ்சம் எமோஷனால அடிச்சிட்டேன் சாரி"ன்னு ஹீரோ நழுவிட்டாராம். கன்னம் வீங்கிப்போன நடிகை சரி நடிப்புதானேன்னு விட்டுட்டாராம். சில நாட்களுக்கு பிறகுதான் திட்டம்போட்டு அடிச்சது தெரிஞ்சுதாம். ஹீரோவையும், டைரக்டரையும் அவரால திட்டத்தான் முடிஞ்சுது.