இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் நடிகர் சமீபத்தில் ஒரு வளரும் இயக்குனர் படத்தில் நடிக்க முடிவெடுத்தது பல சீனியர் இயக்குனர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். அதோடு, தற்போது முன்னணியில் இருக்கும் வேறு சில இயக்குனர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம். நாம் எவ்வளவு நாட்களாக அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்றிருக்கிறோம், நம்மிடம் கதை கேட்காமல் புதியவர்களிடம் கேட்டுள்ளாரோ எனப் பேசிக் கொள்கிறார்களாம். ஒரே நேரத்தில் பிரம்மாண்ட இயக்குனர், வளரும் இயக்குனர் ஆகிய இருவருரின் படங்களில் அந்த நம்பர் ஒன் நடிகர் நடிப்பதற்கான காரணம் என்ன என்பது இப்போது வெளியில் வந்துள்ளதாம்.
இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தன்னுடைய முந்தைய படங்களில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால், ஒரு நிறுவனத்திற்கு சுமார் 70 கோடி வரை கொடுக்க வேண்டி உள்ளதாம். அப்படி அவர் தரவில்லையென்றால் அந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் சொல்லியிருக்கிறார்களாம். ஏற்கெனவே கடைசியாக நடித்து வெளிவந்த படத்தில் சில வினியோகஸ்தர்கள் தன் பெயரை 'டேமேஜ்' செய்ததில் ரொம்பவும் வருத்தத்தில் இருந்த நடிகருக்கு இந்த கடன் விவகாரத்தால் மீண்டும் இமேஜைக் கெடுத்துக் கொள்ள விருப்பமில்லையாம். அதனால்தான், ஒரே நேரத்தில் இரண்டு படம் என்கிறார்கள்.
அப்படியே இருந்தாலும் இரண்டு விதமான இயக்குனர்கள் ஏன் என்பதற்கும் விளக்கம் வைத்துள்ளார்களாம். ஒன்று வசூலை அள்ளுவதற்காம் மற்றொன்று பெயரைப் பெறுவதற்காம். எப்படியோ மேலும் மேலும் பிரச்சனை வளராமல் இருந்தால் சரி.