தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான இயக்குனர்களில் அவரும் ஒருவர். நாயகனுக்கு பைத்தியம் பிடிக்கும் கதையை தன்னுடைய முதல் படமாகக் கொடுத்து திரையுலக ரசிகர்களையும் பைத்தியம் பிடிக்க வைத்தார். தொடர்ந்து சிறந்த படங்களைக் கொடுத்து இதுவரை தமிழ்த் திரையுலகில் நான்கைந்து ஹீரோக்கள் முன்னணிக்கு வருவதற்கு காரணமாக அமைந்திருக்கிறார்.
ஆளைப் பார்த்தால் தோற்றத்தில் அப்பாவி மாதிரி தெரிபவர், அமைதியாக இருப்பர், அதிகம் பேசாதவர் என வெளியில் பெயரெடுத்தவர், ஒரு அதிரடியான ஆசாமி என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் தெரியும். அவரைப் பற்றி பல விதமான கிசுகிசுக்கள் வந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார்.
தற்போது மதுரைக்கார நடிகர், இயக்குனரை வைத்து தஞ்சை மண்ணில் எடுத்து வரும் கிராமிய இசைக் கருவியின் பெயரைக் கொண்ட படத்தின் படப்பிடிப்பில் ஒரு உதவி இயக்குனரை அறைந்து படப்பிடிப்பே நின்று போகக் காரணமாக அமைந்துவிட்டார். அறை வாங்கிய இயக்குனருக்கு ஆதரவாக மற்ற உதவி இயக்குனர்களும் களமிறங்க, தற்போது படப்பிடிப்பு நின்று போயிருக்கிறது. விவகாரம் தற்போது பஞ்சாயத்தில் உள்ளது.
பொதுவாக ஒரு இயக்குனருக்கு உதவி இயக்குனர்கள்தான் நிழலாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இந்தப் படத்தின் வெயில் நேரப் படப்பிடிப்பில் அந்த இயக்குனருக்கு தன்னுடைய நிழலையே கொடுப்பதுதான் ஒரு உதவி இயக்குனரின் வேலையாம். அதாவது, வெயில் அவர் மீது படாமல் தன்னுடைய நிழலால் இயக்குனரை வெயிலிருந்து காக்க வேண்டும் என்பதுதான் ஒரு உதவி இயக்குனருக்கு இடப்பட்டுள்ள வேலை என்கிறார்கள்.
அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கச் சொல்வான் என்பார்கள். ஆனால், இங்கோ குடையை பிடிக்கச் சொல்லாமல் தன்னையே பிடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். இதுக்கு எப்படி பழமொழியை மாற்றுவது...?