ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமா நடிகர்களிலேயே சம்பளத்தில் தாராளமாக இருந்தவர் களவாணி நடிகர். "நான் நடிக்கிறத நடிக்கிறேன், நீங்க கொடுக்குறத கொடுங்க" என்றுதான் சொல்வார். ஜன்னலுக்கு பக்கத்துல, யல்லோ கலர் பேக் படங்களுக்கு கடைசி நேரத்தில் பல லட்சங்களை விட்டுக் கொடுக்கவும் செய்தார். இம்புட்டு நல்லவரா ஒருத்தர இருக்க விடுவாங்களா சினிமாகாரங்க. களவாணி நடிகரோட குணத்தை புரிஞ்சிக்கிட்டு வேணும்னே கடைசி நேரத்துல அவர்கிட்ட படத்தை ரிலீஸ் பண்ண முடியலைன்னு சொல்லி சம்பளத்தை குறைத்துள்ளார்கள். இது நடிகருக்கு லேட்டாத்தான் புரிஞ்சிருக்கு. நல்லவனா இருக்கலாம் ஏமாளியா இருக்க கூடாதுன்னு பிரண்டுக்கு பிராண்டி எடுத்ததுல இப்போது ஆளே மாறிவிட்டார்.
"முழுசா ஒரு கோடி சம்பளம். பாதி பணம் அட்வான்ஸ், மீதி பாதியை டப்பிங்கிற்கு முன்னாடி கொடுத்திடனும் நோ செண்டிமெண்ட், நோ ரிட்டர்ன்" என்று கறாராக சொல்லிவிடுகிறார். அதோடு நம்மள பேசியே கவுத்துடுவாங்கன்னு பயந்து சம்பள விவகாரத்தை கவனிக்க இப்போது தனியாக ஒரு ஆளையும் நியமித்திருக்கிறார்.