விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ரஜினி, கமலைவிட பிசியாக இருக்கிறார் மில்க் கானா. இவர் பாடினாலோ, ஆடினாலோ படம் ஹிட்டுன்னு ஒரு சென்டிமெண்ட்டை யாரோ தட்டிவிட மில்க்கானா காட்டில் கன பண மழை. கைவசம் 100 படங்கள் என்கிறார்கள். பாட்டுக்கு பத்து லட்சம், பாடி ஆட 20 லட்சம், சில காட்சிகள் நடிக்க வேண்டியது இருந்தால் பேக்கேஜா 25 லட்சம் என்பதுதான் அவரின் மெனுகார்ட்.
அதையும் கொடுக்க தயாரா இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் வந்த படத்துக்கெல்லாம் அட்வான்ஸ் வாங்கி போட்டுவிட்டு இப்போது அதனை செய்து கொடுக்க முடியாமல் திணறுகிறாராம். ஒரு நாளைக்கு நான்கு பாட்டு எழுத வேண்டும், இரண்டு படங்களிலாவது நடிக்க வேண்டும் அல்லது ஆட வேண்டும் என்கிற நிலை இதைச் செய்ய முடியாமல் தவிக்கிறார்.
இதனால் கால்ஷீட் சொதப்பல்கள் ஏராளமாகி நிறைய தயாரிப்பாளர்களுக்கு பண விரயம். பல படங்கள் இவருக்காக காத்திருக்கிறது. விஷயம் பஞ்சாயத்துக்கு போயி பெயர் பஞ்சராகுறதுக்குள்ள பலரிடம் வாங்கிய அட்வான்சை திரும்பிக் கொடுத்து ஜகா வாங்கிவிட திட்டமிட்டிருக்கிறாராம் மில்க் கானா. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சும்பாங்க. அது கானா விஷயத்துல சரியா இருக்கு என்கிறார்கள்.