தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர், அவர் நடித்து தீபாவளியன்று கூட ஒரு திரைப்படம் வெளிவந்து தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவருக்கும் சீனியர் நடிகர் ஒருவரின் மகளான வாரிசு நடிகைக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வருகிறது என்பது மீடியாக்களில் அடிக்கடி செய்திகள் வெளியானது. நடுவில் கேரள வரவு லட்சுமிகரமான நடிகையுடன் ஹீரோ கிசுகிசுக்கப்பட்டாலும், அவருக்கும் வாரிசு நடிகைக்குமான காதல்தான் உண்மையானது என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் கூட சொல்கிறார்களோ, இல்லையோ சம்பந்தப்பட்ட வாரிசு நடிகையே அவர்களைப் பற்றிய புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
தீபாவளி தினத்தன்று அந்த நடிகர், நடிகை மற்றும் அவர்களுடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடியதை அந்த நடிகையே சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இருவரும் கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தார்களாம். இருவரது காதலுக்கும் சம்பந்தப்பட்ட வீட்டார் இருவரும் பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள் என்கிறார்கள். அதனால்தான் வாரிசு நடிகையின் சித்தி நடிகை கூட நடிகரின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்கிறார்கள். காதல் ஜோடியின் தீபாவளி கொண்டாட்டத்தில் 'பூஜை'க்கு வந்த மலரே வா...” என்ற பாடல்தான் அதிகம் ஒலித்திருக்குமோ....