டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நாம் ஆச்சரியப்படும் போது சொல்லும் ஒற்றை எழுத்தை தலைப்பாக வைத்து படமெடுத்து வரும் விருது தயாரிப்பாளர் மீது பிரம்மாண்ட இயக்குனர் கடும் கோபத்தில் இருக்கிறாராம். அந்தப் படம் ஆரம்பமான நாளிலிருந்து இதுவரை பட ரிலீஸ் வரை பல விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்காமல் போனதே அதற்குக் காரணம் என்கிறார்கள். அதோடு படத்தின் தயாரிப்பாளரே, பட்ஜெட்டைப் பற்றியும், மற்ற சில விஷயங்களையும் அவராகவே தன்னிச்சையாக ஒரு சில பத்திரிகையாளர்களை அழைத்து தகவல்களைச் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னபடி படத்தின் பட்ஜெட் 150 கோடி எல்லாம் இல்லை, வெறும் 100 கோடிக்குள்தான் என ஒற்றைப் பட பிரம்மாண்ட இயக்குனர் சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.
பொதுவாகவே, எந்தப் படத்தைப் பற்றியும் வெளியீட்டிற்கு முன் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எந்த தகவலையும் சொல்ல மாட்டார்கள், படத்தின் இயக்குனர்தான் அவற்றைப் பற்றிப் பேசுவார். ஆனால் ஒற்றைப் பட விருது தயாரிப்பாளர் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு செய்தி வழங்கி வருவதும் இயக்குனருக்கு எரிச்சலை ஏற்படுத்தியருக்கிறதாம். படத்தின் பட்ஜெட்டைப் பற்றி இயக்குனர் அப்படியே குறைத்துப் பேசியது தயாரிப்பாளருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். ஒன்றிரண்டு கோடிகள் பட்ஜெட்டில் அதிகமாகச் சொன்னால் பரவாயில்லை, பாதிக்குப் பாதி தயாரிப்பாளர் அதிகமாகச் சொல்லி எங்கே தனது பெயரை கெடுத்து விடுவாரோ என்று நினைத்துதான் இயக்குனர் உண்மையான பட்ஜெட்டை வெளியில் சொன்னார் என கோலிவுட் வியாபாரப் புள்ளிகள் தெரிவிக்கிறார்கள்.