விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
கதை டிஸ்கஷனை பொதுவாக எங்காவது மலைப் பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் நடத்துவார்கள், அல்லது கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள ரிசார்ட்டுகளில் நடத்துவார்கள். ஹீரோக்கள் பல நேரங்களில் அப்படிப்பட்ட கதை விவாதங்களில் கலந்து கொண்டு அவர்களது கருத்துக்களையும் முன் வைப்பதுண்டு. ஆனால், முன்னணி இயக்குனர்களின் படங்களிலோ, ஹீரோக்களின் படங்களிலோ நடிக்கும் ஹீரோயின்களுக்கு கதையை சொல்வார்களா என்பது சந்தேகம்தான். கன்னடத் திரையுலகில் சமீபத்தில் இப்படிப்பட்ட கதை விவாதம்தான் ஒரு பரபரப்பான செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழில் 'ஹுக்' படத்தில் அறிமுகமான நடிகை சமீபத்தில் ஒரு இயக்குனருடன் காரில் நீண்ட தூரம் பயணித்ததைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்களாம். திருமணமாகி திரையுலகை விட்டு விலகியிருக்கும் அந்த நடிகை ஏன் அந்த இயக்குனருடன் காரில் பயணித்தார் என்பதைப் பெரிய செய்தியாக்கிவிட்டார்களாம். ஆனால், நடிகையோ அடுத்து நடிக்க இருக்கும் படத்தைப் பற்றிய கதையை விவாதிப்பதற்காகவே காரில் நீண்ட தூரம் பயணித்தோம் என்று சொன்னாராம். திருமண விவகாரத்தில் நடிகைக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டதாகவும் தெரிகிறது. நடிகையைவிட இளையவரான அந்த இயக்குனரும், நடிகையும் நட்பாகப் பழகி வருகிறார்கள் என சாண்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.