கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
அரசியல் விளையாட்டில் ஆட்டம் கண்டு கிடக்கும் அந்த புயல் காமெடியன், அதையடுத்து, அரசியல் பற்றி யாராவது வாய் திறந்தாலே, இங்கு அரசியல் பேச அனுமதியில்லை என்று சொல்லி, பேசினவர்களின் வாய்க்கு திண்டுக்கல் பூட்டை மாட்டி வந்தார். ஆனால் இப்போது, தான் எந்த கட்சிக்கு ஆதரவாக முழக்கமிட்டோமோ, அதே கட்சியில் தனது எதிரியான அந்த நடிகரின் கட்சியை இணைக்க பேச்சுவார்த்தை நடப்பதால், கோபத்தின் உச்சாணியில் இருக்கிறாராம் காமெடியன.
இவர்களுக்கெல்லாம் கொள்கையே கிடையாதா? இது தெரியாமல் நானும் வாய் விட்டு வம்பில் மாட்டிக்கிடக்கிறேனே என்று தனது சகாக்களிடம் சொல்லி அடிக்கடி கொந்தளிப்பவர், இப்போது சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். அதனால், இலைக்கட்சியில் தன்னை இணைக்க தூது அனுப்பிக்கொண்டிருக்கும் நடிகர், சத்தியம் நீயே, தர்ம தாயே என்று எம்ஜிஆர் பாடிய செண்டிமென்ட் பாடல்களை கார்டன் திசை பார்த்து அமர்ந்தபடி பாடிக்கொண்டிருக்கிறாராம்.