தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அரசியல் விளையாட்டில் ஆட்டம் கண்டு கிடக்கும் அந்த புயல் காமெடியன், அதையடுத்து, அரசியல் பற்றி யாராவது வாய் திறந்தாலே, இங்கு அரசியல் பேச அனுமதியில்லை என்று சொல்லி, பேசினவர்களின் வாய்க்கு திண்டுக்கல் பூட்டை மாட்டி வந்தார். ஆனால் இப்போது, தான் எந்த கட்சிக்கு ஆதரவாக முழக்கமிட்டோமோ, அதே கட்சியில் தனது எதிரியான அந்த நடிகரின் கட்சியை இணைக்க பேச்சுவார்த்தை நடப்பதால், கோபத்தின் உச்சாணியில் இருக்கிறாராம் காமெடியன.
இவர்களுக்கெல்லாம் கொள்கையே கிடையாதா? இது தெரியாமல் நானும் வாய் விட்டு வம்பில் மாட்டிக்கிடக்கிறேனே என்று தனது சகாக்களிடம் சொல்லி அடிக்கடி கொந்தளிப்பவர், இப்போது சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். அதனால், இலைக்கட்சியில் தன்னை இணைக்க தூது அனுப்பிக்கொண்டிருக்கும் நடிகர், சத்தியம் நீயே, தர்ம தாயே என்று எம்ஜிஆர் பாடிய செண்டிமென்ட் பாடல்களை கார்டன் திசை பார்த்து அமர்ந்தபடி பாடிக்கொண்டிருக்கிறாராம்.