வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
தளபதி நடிகருடன் டூயட் பாடுவதற்கு முன்பு வரை சீரியசான நடிகையாக இருந்தார் அந்த சிந்துசமவெளி பார்ட்டி. ஆனால், அந்த படத்திற்கு பிறகு அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்களாம். 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 12 மணிக்குத்தான் வருகிறாராம். இரண்டொரு சீனில் நடித்து முடிக்கும்போது, வாய் வலி, வயிற்று வலி என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எஸ்கேப்பாகி விடுகிறாராம்.
இப்படி சுள்ளான் நடிகருடன் நடித்து வரும் படத்திலும் அம்மணியின் அலம்பல்கள் தொடர்கிறதாம். முதலில் இதை சகித்துக்கொண்ட நடிகர், சில நாட்களில் கேரவனை கொண்டு செல்ல முடியாத இடங்களுக்குகூட அது வந்தால்தான் நான் வருவேன் என்று அம்மணி குடைசச்ல் கொடுப்பதால் அவர் மீது செம டென்சனில் இருக்கிறாராம்.
இதனால் அடுத்து தனது பேனரில் தயாரிக்கயிருந்த படத்துக்கும் பால் நடிகையிடம் ஏற்கனவே பேசி வைத்திருந்த நடிகர், இப்போது அவரை இத்தோடு ஓரங்கட்டி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டதோடு, நடிகையிடம் முகம் கொடுத்து பேசுவதையே குறைத்து வருகிறாராம்.