'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக களமிறங்கி கதாநாயகி அந்தஸ்தை பிடித்தவர் சில்க்ஸ்மிதா. ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர். இதில் கமலுடன் நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா என்ற பாடல் சில்க்கை பெரிய இடத்துக்கு கொண்டு சென்றது. அதன்பிறகுதான் அவரது மார்க்கெட் தாறுமாறாக எகிறியது.
ஆனால், மார்க்கெட் பீக்கில் இருந்த நேரத்தில் திடீரென ஒருநாள் சில்க் இறந்து விட்டார். அவரது இறப்பு கொலையா? தற்கொலையா? என்ற சர்ச்சைகள் அப்போது எழுந்தது. ஆனால், தற்கொலையாகவே முடிக்கப்பட்டது. இந்த நிலையில், சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி இந்தி, தமிழ், மலையாளத்தில் படங்கள் வெளியாகின, அந்த படங்களில் வித்யாபாலன், சனாகான் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆனால், சில்க்ஸ்மிதாவின் ஜெராக்ஸ் போன்று இருக்கும் ஜூனியர் பிந்துமாதவியை மறந்தே விட்டார்கள். அதுதான் பிந்துமாதவிக்கு பெரிய வருத்தமாக உள்ளதாம். மேலும், அடுத்து சில்க் பாணியில் யாராவது படம் பண்ணினால் அவர்களை சந்தித்து சான்ஸ் கேட்பேன் என்று கூறிவரும் பிந்துமாதவி, இனிமேல் குடும்ப நடிகை என்கிற முத்திரையை கழட்டி எறிந்து விட்டு, சில்க்ஸ்மிதா போன்று கிளாமர் நாயகியாகவும் அவதரிக்கப்போகிறாராம்.