ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதையடுத்து பல படங்களுக்கு இசையமைத்தவர். ரஜினியின் குசேலன் படத்திற்கு பிறகு பாலாவின் பரதேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி, விஜய்யின் தலைவா என முன்னணி இயக்குனர், நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து இப்போது முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்து விட்டார்.
இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக பாடகி சைந்தவியை காதலித்து வந்தார் ஜி.வி.பிரகாஷ்குமார். அவரது இசையில் சைந்தவி நிறைய பாடல்கள் பாடியதை அடுத்து அவர்களின் காதல் இன்னும் உறுதியானது. இதையடுத்து அவர்களின் பெற்றோருக்கும் காதல் தெரிந்தபோது, யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, நேற்று சென்னையில் ஜி.வி.பிரகாஷ்குமார்- சைந்தவியின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் செட்டியார் மண்டபத்தில் காலை 10 மணி அளவில் மணமகள் சைந்தவியின் கழுத்தில், பிரகாஷ்குமார் தாலி கட்டினார். அப்போது அனைவரும் மலர்தூவி மணமக்களை மனதார வாழ்த்தினர். இதையடுத்து திரையுலகின் முன்னணி ஜாம்பவான்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் நேற்று மாலை அதே மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.