அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இரண்டாவது இன்னிங்ஸ் அதிரடியாக இருக்க வேண்டும் என்று பல கதைகளைக்கேட்டு கடைசியாக பட்டாபட்டி படத்தை இயக்குனருக்கு கால்சீட் கொடுத்து அந்த கஜபுஜகஜ படத்தில் நடித்து வந்தார் வைகை நடிகர். ஆனால், ஆரம்பத்திலிருந்தே அவருக்கும், டைரக்டருக்குமிடையே சரியான புரிதல் இல்லையாம். அதனால் தானே மானிட்டர் முன்பு அமர்ந்து டைரக்டர் தோரணையில் கரெக்சன் சொல்லியிருக்கிறார் காமெடி புயல்.
இது நாளுக்கு நாள் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் டைரக்டருக்கு டைரக்சன் பண்ணவே தெரியவில்லை என்று புயல் காமெடியனே இயக்குனர் பொறுப்பையும் கையிலெடுத்துவிட்டாராம். இந்த ஓவர்டேக் காரணமாகத்தான், அப்படத்தில் பணியாற்றிய கேமராமேன்கள் இங்கே சுதந்திரமாக வேலை செய்ய முடியாது என்று வரிசையாக வெளியேறினார்களாம்.
ஆக,. இப்போது, மோதல் அதிகமாகி படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால், இம்சை அரசன் இயக்குனர் என்னை வைத்து இயக்க வருடக்கணக்கில் காத்திருந்தார். ஆனால், அவரை கழட்டிவிட்டு, இந்த டைரக்டரை நம்பி களமிறங்கியதற்கு எனக்கு தண்டனை கிடைத்து விட்டது என்று புலம்பிக்கொண்டிருக்கிறாராம் புயல் நடிகர்.