வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நயன்தாராவுக்கு அடுத்தபடியாக ஆர்யா படு சுதந்திரமாக பழகுவது ஹன்சிகாவுடன் மட்டும்தான். சேட்டை பட ஸ்பாட்டில் இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு போட்ட கடலை கொஞ்சநஞ்சமல்ல என்கிறார்கள். ஆனால், அப்படியெல்லாம் இருந்து விட்டு, இப்போது சேட்டை படம் ஊத்திக்கொண்டதால், இனிமேல் ஆர்யாவுடன் நடிக்க மாட்டேன் என்று ஹன்சிகா செய்தி வெளியிட்டிருக்கிறார். இதுதான் ஆர்யாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதனால், அவர் நம்பருக்கு அடிக்கடி போன் போட்டு அவரை சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறாராம் நடிகர். அவரை சுத்தமாக தவிர்க்க நினைக்கும் ஹன்சிகா, அவரது போன் கால்களையும் அட்டன் பண்ணுவதில்லையாம்.
இதுகுறித்து ஆர்யா புலம்பிக்கொண்டு திரிந்தபோது, இதற்கெல்லாம் ஹன்சிகா காரணமில்லை. அந்த வாலு நடிகர்தான் காரணம் என்று சில கோலிவுட் அம்பிகள் திரித்து விட்டார்களாம். இதனால் தனது நட்பு வட்டார நடிகர்களை திரட்டி, அந்த நடிகர் இப்படி செய்வது நியாயமா? சினிமாவுக்குள் வரும் நடிகைகள் நாம் அனைவருக்கும் பொதுதானே. இதில் இவர் மட்டும் எப்படி தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியும் என்று நியாயம் பேசிக் கொண்டிருக்கிறாராம் ஆர்யா.