இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அந்த மூன்றெழுதது யானை படத்தில் நடிகையாக அறிமுகமானவர் கேரளத்தைச்சேர்ந்த அந்த பதினைந்து வயசு நடிகை. ஆனால் அதையடுத்து அவர் நடித்த அந்த பாண்டியன் பெயர் கொண்ட சுந்தரமான படம் முந்திக்கொண்டு திரைக்கு வந்தது. அதோடு அப்படமும் வெற்றி பெற்றதால் மேற்படி படத்தின் ஐந்தெழுத்து மதுரைக்கார ஹீரோ மேற்படி நாயகியை தனது புலி படத்திலும் ஜோடி சேர்த்து ஆஸ்தான நடிகையாக்கி விட்டார். இதனால் இப்போது நடிகருக்கு தனது மனதில் இடம் கொடுத்து விட்டார் அந்த நடிகை. சென்னைக்கு எப்போது வந்தாலும் நடிகரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறாராம்.
இதனால் இனி நான் நடிக்கும் படங்கள் அனைத்திலும் நீதான் கதாநாயகி என்று நடிகைக்கு உத்தரவாதம் கொடுத்துள்ள நடிகர், தனக்கு நெருக்கமான கம்பெனி படங்களாக வாங்கிக்கொடுக்கிறார். குறிப்பாக, நடிகையை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டால் அந்த நடிகர்களுடன் அவரை நடிக்கவிடுவதில்லை. நடிகையிடம் ஏதாவது பொய்யை சொல்லி அந்த படத்தில் நடிக்கவிடாமல் செய்து விடுகிறார். இது நடிகைக்கும் தெரிந்தும், சினிமாவுககு தான் புதிது என்பதால், யாருடைய கட்டுப்பாட்டிலாவது இருப்பதுதான் தனக்கு பாதுகாப்பு என்று நடிகர் போடும் வட்டத்துக்குள் நிற்கிறாராம். மேலும் இதுவரை சென்னைக்கும், கேரளத்துக்கும் பறந்து கொண்டேயிருந்த நடிகை, இப்போது பத்தாவது பரீட்சை எழுதி விட்டதால் இனி முழு நேரமும் கோடம்பாக்கவாசியாக தற்போது சென்னையில் தீவிரமாக வீடு பார்த்து வருகிறார்.