ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒன்பது தாராவை இப்போது யாரும் நெருங்கிவிட முடியாதபடி சபாரி பூனை பாதுகாப்பு படையை உருவாக்கி கொடுத்திருக்கிறார் உதயமான அந்த பெரிய இடத்து தயாரிப்பாளர் கம் நடிகர். ஒன்பது தாராவுக்கு தனி சொகுசு கேரவன். கேரவனைச் சுற்றி நான்கு பக்கமும் பாதுகாப்பு சபாரி படை. இரண்டு பேர் எப்போதும் கேரவன் வாசலில் நிற்கிறார்கள். பெண் உதவியாளர், மேகஅப் உமன், தயாரிப்பாளரின் மனைவி தவிர வேறு யாருக்கும் கேரவனுக்குள் அனுமதி கிடையாது. ஷாட்டுக்குச் சென்றால் கூடவே நான்கு சபாரி படை வீரர்கள் சென்று ஷாட் முடிந்ததும் பத்திரமாக அழைத்து வந்து கேரவனுக்குள் விடுகிறார்கள். அதேபோல ஓட்டலில் இருந்து படப்பிடிப்புக்கு கிளம்பும்போதும், படப்பிடிப்பிலிருந்து ஓட்டலுக்கு கிளம்பும் போதும் ஒரு இன்னோவா நிறைய சபாரி வீரர்கள் பாதுகாப்பாகச் செல்கிறார்கள். இதையெல்லாம் ரசித்து அனுபவிக்கிறாராம் ஒன்பது தாரா.