திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
விஸ்வரூபம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பாக கூறி அதற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு ஒருவழியாக இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. அடுத்து ஒரு படம் இதே போன்ற கதையுடன் வருகிறது. அது "கரும்புலி". முதலில் "உயிரெழுத்து" என்ற பெயரில் தொடங்கப்பட்ட படம் இப்போது கரும்புலி ஆகியிருக்கிறது. முதலின் சென்னை தணிக்கை குழு படத்தை அனுமதிக்க மறுத்தது. மறு தணிக்கையிலும் படத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதன்பிறகு தணிக்கை குழு சொன்ன காட்சிகள் அனைத்தையும் நீக்கி விட்டு அதற்கு பதிலாக வேறு காட்சிகள் படமாக்கப்பட்டு அதனை படத்தில் சேர்த்து இப்போது தணிக்கை சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
இந்தியாவை தீவிரவாதிகள் அழிக்க வருவதாகவும், அதனை ஹீரோ தடுத்து காப்பாற்றுவதாகவும் கதை. மகேஷ் என்பவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். வர்ஷா பாண்டே ஹீரோயின். "ஒரு தீவிரவாதி உண்மையான முஸ்லிம் இல்லை. ஒரு உண்மையான முஸ்லிம் தீவிரவாதியாக இருக்க மாட்டான் என்ற கருத்தைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன். தணிக்கை குழுவின் விதிகளுக்கு உட்பட்டு காட்சிகளை மாற்றி உள்ளோம். வருகிற 15ந்ந தேதி வெளிவருகிறது" என்கிறார் இயக்குனர் பரமேஷ்வர்.