பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உலக நாயகனுக்கு ஒரு பிரச்சினை. சொத்துக்கள் எல்லாம் அவர் கையை விட்டுப் போகும் நிலை. இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று நாடு கடந்து செல்ல இருப்பதாக உலக நாயகன் அறிவிக்கிறார். திரையுலகமே பொங்கும் கண்ணீரோடு ஆழ்வார்பேட்டையில் கூடுகிறது. நாங்கள் இருக்கிறோம் உங்களுக்குன்னு இந்தி நடிகர்கள் உள்பட அத்தனை மொழி கலைஞர்களும் கமலுக்காக குரல் கொடுக்கிறாங்க. வீடு, வாசலைத் துறந்து ஆழ்வார்பேட்டைக்கு ஓடிவருகிறான் ரசிகன்.
ஆனால் அவர் குடும்பம் எங்கே போனது என்பதுதான் ரசிகனிடம் எழுந்திருக்கும் கேள்வி. ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்குதாரர் என்ற முறையில் அண்ணன் சந்திரஹாசனும், கமலின் அன்புக்கு பாத்திரமானவர் என்கிற வகையில் கவுதமியும் மட்டுமே களத்தில் நிற்கிறாங்க. அவரது மாஜி மனைவிகள், மகள்கள். இன்னொரு அண்ணன். அண்ணன் மகள்கள் இவர்கள் எங்கே. தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல ஒதுங்கி இருக்கிறார்களே ஏன்? ஊர் பிரச்சினைக்கெல்லாம் ஒடிவந்து குரல் கொடுக்கும்
அண்ணன் மகள் எங்கே போனார் என்று ஆழ்வார் பேட்டையில் கூடும் ரசிகன் ஆதங்கத்தோடு கேட்கிறான். இந்த செய்தி வதந்தியாக இருக்கட்டும், கமலுக்கு அவர்கள் உள்ளுக்குள் தைரியம் சொல்கிறார்கள், ஆலோசனை சொல்கிறார்கள் என்பது நிஜமாக இருக்கட்டும் என்பதே ரசிகனின் ஆசை.