'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லட்டு திண்ண பவர் ஸ்டாருக்கு மீடியாக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் டாப் ஹீரோக்களை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். சில தினங்களுக்கு முன்பு அடையாரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூடி கும்மாளமடித்த ஹீரோக்கள் இதுகுறித்து காரசாரமாகவே பேசிக் கொண்டார்களாம். "நாமெல்லாம் கஷ்டப்பட்டு நடிச்சு படம் பண்ணினால் அது சொத்தை இது சொதப்பல்னு சொல்ற மீடியாக்கள், ஒரு கிரிமினல் நடிச்ச படத்தை தலைக்கு மேல வச்சு கொண்டாடுறாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்" என்று வீராவேசம் பேசியிருக்கிறார்கள். சந்தனமான காமெடி இனியும் பவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தங்கள் படத்திலிருந்து சந்தனத்தை கரைத்து விட வேண்டியதுதான் என்றும் பேசி முடிவு செய்திருக்கிறார்களாம். அதோடு பவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அதில் நாம் கலந்த கொள்ளக்கூடாது என்றும் அந்த ரகசிய கூட்டத்தில் ரகசிய தீர்மானம போட்டிருக்காங்களாம்.