ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவர் பிரபாகரன். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால், அவரை அழைத்து கதையை கேட்டார் உதயநிதி. அந்த கதையும் ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு இணையாக காதல் வித் லவ் பாணியில் இருந்ததால் உடனே தான் அதை தயாரித்து நடிப்பதாக அவருக்கு வாக்கு கொடுத்தார். இதனால் மிகுந்த உற்சாகத்தோடு அந்த படவேலைகளில் இறங்கினார் பிரபாகரன். அதோடு, நயன்தாரா, சந்தானத்தையும் உடனடியாக புக் பண்ணினார்கள்.
ஆனால் இசையமைப்பாளராக யாரை புக் பண்ணலாம் என்ற பேச்சு எழுந்தபோது, சுந்தரபாண்டியன் படத்துக்கு இசையமைத்த ரகுநந்தனின் பெயரை சிபாரிசு செய்தாராம் பிரபாகரன். ஆனால் அதில் உதயநிதிக்கு உடன்பாடில்லையாம். இருப்பினும் உடனடியாக அதற்கான பதிலை சொல்லாமல் இழுத்தடித்தவர், தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் எனக்கு முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர். அதனால் இந்த படத்துக்கும் அவரைதான் இசையமைக்க வைக்கும் முடிவில் இருக்கிறேன் என்றாராம். ஆனால் பிரபாகரனோ, ரகுநந்தன் எனது நண்பர், அதனால் அவருடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருக்கும் என்று தனது கருத்தை முன்வைத்தாராம். ஆனால் இந்த விசயத்தில் அவருக்கு விட்டுக்கொடுக்கவில்லையாம் உதயநிதி. ஹாரிஸ் ஜெயராஜ் எனக்கு ஹிட் கொடுததவர் மட்டுமின்றி, நானே அவரது ரசிகரும்கூட. அதனால் எனது இந்த முடிவில் மாற்றமில்லை என்று உறுதிபடுத்தி விட்டாராம். அதனால் வேறுவழியில்லாமல் அதற்கு உடன்பட்டிருக்கிறார் பிரபாகரன்.