'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஊர் பெயரிலேய படம் எடுத்து பெரிய அரசரானவர் அந்த இயக்குனர். சூப்பர் டூப் ஹிட்டெல்லாம் கொடுத்தவர். திடீரென அவர் பாணி அடிதடி படம் போரடிக்க வாய்ப்புகள் குறைந்தது. வேறு பாணியில் படம் எடுக்கவும் அவருக்குத் தெரியவில்லை. இதனால் புதிய படம் வரவில்லை. இருந்தாலும் அவர் தன் பாணி மீது அதீத நம்பிக்கை வைத்து சின்னத்தளபதியை வைத்து சென்னை பக்கத்தில் உள்ள முருகனின் அறுபடை வீட்டு ஸ்தலத்தின் பெயரில் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தின் தாயாரிப்பாளர் பாதியில் விலகிக் கொள்ள பெரிய அரசுவே கந்து வட்டிக்கு கடன் வாங்கி படத்தை முடித்து வெளியிட்டார். எப்படியும் போட்ட பணம் வந்துவிடும் என்று நம்பினார். நம்பிக்கை வீண்போனது. படம் நாலு நாளைத் தாண்டவில்லை. கோடிக் கணக்கில் நஷ்டம். தற்போது இயக்குனர் கடனை அடைக்க முடியாமலும், புதிய பட வாய்ப்பு இல்லாமலும் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். யாராவது வாய்ப்புக் கொடுத்து அவரது சம்பளத்தை முன்னதாகவே கொடுத்தால் கூட பாதி கடனைத்தான் அடைக்க முடியுமாம்.