துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தூத்துக்குடி அருகே 13 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடியவர்களுக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை வழங்குங்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு டைரக்டர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டில்லியில் கடந்த 16ம்தேதி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொடிய நிகழ்ச்சி நம் நெஞ்சை விட்டு மறைவதற்குள், தூத்துக்குடி மாவட்டத்தில் 7ம் வகுப்பு படித்த மாணவி புனிதா மிகக் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதாக வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, இக்கொடிய செயலைச் செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும். இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவி சம்பவத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கும் டில்லி அரசுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டியாக இருந்து இந்தியாவுக்கே உதாரணமாக திகழவேண்டும், என்று கூறியுள்ளார்.