இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு செலவிட்டு வருகிறேன், என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். மும்பையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய தமன்னா அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இதுவரை என்ன சாதித்தேன் எத்தனை பேருக்கு உதவியாக இருந்தேன் என்றெல்லாம் திரும்பி பார்ப்பேன். நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு செலவிடுகிறேன். ஆதரவற்றோருக்கு உதவுகிறேன். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பர். எனவே நான் செய்யும் உதவிகளை விளம்பரபடுத்த விரும்பவில்லை.
2005ல் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தேன். இங்கு நிறைய கற்றுக்கொண்டேன். யாரும் கையை பிடித்து அழைத்து செல்லமாட்டார்கள். நாமாகத்தான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற வேண்டும். படப்பிடிப்புக்காக நிறைய நாடுகளை சுற்றி வந்து விட்டேன். அதில் எனக்கு பாரீஸ் ரொம்ப பிடித்தது. அங்கு ஷாப்பிங் போவது மகிழ்ச்சியாக இருக்கும். சீனாவுக்கு படப்பிடிப்புக்கு சென்ற போதுதான் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன், என்றார்.