ஈயின் காதலியை துரத்தும் நடிகர்!!
ஈயின் காதலியான பொன்வசந்த நடிகை தமிழில் அறிமுமாகி சின்னப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் தமிழ்நாடு முழுவதும் கிளைகள் வைத்திருக்கும் ஒரு கடை அதிபரின் மகன். அவரும் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். பொன் வசந்தம் தற்போது தெலுங்கு பக்கம்போய் அங்கு நம்பர் ஒன் நடிகையாகிவிட்டார். தமிழுக்கு இப்போது திரும்ப வந்திருக்கிறார். இந்த நிலையில் தனது பழைய நட்பை புதுப்பிக்க விரும்பினார் அந்த கடை அதிபர் மகன். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரை துரத்தினாராம். விடாது போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரை நெருங்க முடியவில்லை. கடைசியாக ஐதராபாத்துக்கு ஃபிளைட் ஏறும் முன் பொன்வசந்தம். அவருக்கு அனுப்பிய ஒரு எஸ்.எம்.எஸ்.சில் கடை அதிபர் மகன் அப்செட். "நீ பிசினஸ் மேன். நான் பிசி ஆர்ட்டிஸ்ட். நான் ரொம்ப தூரம் வந்துட்டேன். இனிமே தொந்தரவு பண்ணினால் நான் வேறு மாதிரி டீல் பண்ணுவேன்" என்பதுதான் அந்த எஸ்.எம்.எஸ்.