Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கேமராமேனுக்கு உழைப்பு முக்கியம்: கும்கி சுகுமார் சிறப்பு பேட்டி!!

18 டிச, 2012 - 14:09 IST
எழுத்தின் அளவு:

லாடம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சுகுமார். மதுரை சம்பவம், தடையறத்தாக்க, உள்பட பல படங்களில் பணியாற்றி இருந்தாலும் கும்கி மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சுகுமார். அவரின் சிறப்பு பேட்டி இதோ...

* போட்டோ கிராபராக இருந்து ஒளிப்பதிவாளரானது எப்படி?

இந்த கேள்வியே தப்பு.  பிளஸ் 2 படிச்ச நீங்க எப்படி காலேஜ்ல சேர்ந்துங்கீன்னு கேட்டா எப்படியோ அதுமாதிரிதான் இந்த கேள்வியும். ஒவ்வொரு கேமராமேனுக்கும் அடிப்படை தகுதியே போட்டோ கிராபர்தான். போட்டோ கிராபியில தேறினாத்தான் ஒளிப்பதிவாளனாக ஆக முடியும். அது தெரியாம சில பேர் அவரு போட்டோ கிராபரா இருந்து ஒளிப்பதிவாளராயிட்டார்னு சொல்றாங்க. ஆனால் ஒரு உண்மை தெரியுமா இங்குள்ள சில கேமராமேன்களுக்கு போட்டோ எடுக்கவே தெரியாது. நான் சொல்றது பிலிம் கேமரா. பிலிம் கேமராவுல ஒருத்தருக்கு நல்ல லைட்டிங், அப்ரோச்சர், நாலெஜ் இருந்தா அவரு கேமராமேனா ஆயிடலாம்.

* கும்கி அனுபவம் எப்படி?

அதை அனுபவம்னு எப்படி சொல்லது ஒவ்வொரு நாளும் பாடம் படிச்சேன். கிட்டத்தட்ட ஒண்ணறை வருஷம் கும்கியோட குடும்பம் நடத்தியிருக்கேன். மாணிக்கம் (கும்கியில் நடித்த யானை) என்னோட நெருக்கமான தோழனாயிட்டார். இப்போ அவன் பக்கத்துல இல்லாதது என்னவோ போல இருக்கு. அவன்கிட்டேருந்து வரும் வாசனை இன்னும் என்னைச் சுத்தியிருக்குற மாதிரி ஃபீலிங். யானை ஒரு பெரிய குழந்தைங்றத நான் அனுபவ பூர்மா உணர்ந்தேன்.

* கும்கி அருவிக் காட்சியை எப்படி படமாக்கினீங்க?

அது தொழில் ரகசியம். இருந்தாலும் படம் வெளிவந்துட்டதால சொல்றேன். அது கர்நாடகா காட்டுக்குள்ள இருக்குற ஜோக் பால்ஸ். ரிசர்வ் பாரஸ்டுக்குள்ள இருக்குறதால பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. பெரும் போராட்டத்துக்கு பிறகு அனுமதி வாங்கினோம். எங்க உயிருக்கு நாங்களே பொறுப்புன்னு எழுதி வாங்கிட்டு உள்ளே அனுப்பினாங்க. வாகனத்தை விட்டு இறங்கி பத்து கிலோமீட்டர் நடந்தே போயி அந்த இடத்தை அடைந்தோம். இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னாலேய அருவியின் சத்தம் கேட்டது. நாங்க முதல்ல போனதே அருவியோட உச்சிக்குத்தான். அதன் அழகை ரசிக்கணும்னா படு பாதாளமான பாதையில் கீழே இறங்கிச் செல்லணும். கயிறு கட்டி இறங்கி படம் பிடித்தோம். லட்சுமி மேனனை நாற்காலியில் உட்கார வச்சு கயிறு கட்டி இறக்கினோம். மேலே ஒரு வலுவான மரத்தில் ஜிம்மி ஜிப்பை கட்டி அதன் மேல் நின்று படம் எடுத்தோம். இந்த அழகை கேமராவுல அள்ளிக்கிட்டு போகணும், இல்லேன்னா இதுலேயே விழுந்து செத்துடணும்ங்ற வெறியே வந்துச்சு. ஏன்னா அத்தனை அழகை நீங்க பக்கத்துல போயி பார்க்க சான்சே இல்லை. தியேட்டர்ல அந்த காட்சிக்கு ஆடியன்ஸ் கைதட்டினப்போ கண்ணுல கண்ணீர் வந்துருச்சு. ஒரு ஒளிப்பதிவாளனா ஜெயிச்சுட்ட ஃபீலிங் இருக்கு.

* மாணிக்கத்துக்கு நிஜமாவே மதம் புடிச்சிருச்சாமே?

ஆமாம், மாணிக்கத்தோட 50 நாள் ஷூட்டிங். 48வது நாள்ல மதநீர் வடிய ஆரம்பிச்சிருச்சு. பாகன் "சார் இரண்டு நாளைக்குள்ள வேலைய முடிச்சிருங்ஞ என்றான். அதனால் இரவு பகல் பாராம வேலைய முடிச்சோம். இப்போ மாணிக்கத்துக்கு மதம் குணமாயிடுச்சுன்னு செய்தி வந்திருக்கு சந்தோஷமா இருக்கு.

* யானை பஸ் நிலையத்தில் விக்ரமை தேடுற சீன் எப்படி சாத்தியம்?


மாணிக்கம் நிஜமாவே தன்னோட ஒரிஜினல் பாகன் மேல உசிரையே வச்சிருக்-கு. படப்பிடிப்புல ஒரிஜினல் பாகனை ஒரு பஸ்சில் ஒழிந்து இருக்க வைத்தோம். அவனது வாச¬யைத் தேடி யானை அலைந்ததை அப்படியோ லைவா எடுத்தோம்.

* இவ்வளவு கஷ்டப் பட்டிருக்கீங்க. அப்புறம் ஏன் கிளைமாக்சுல கிராபிக்ஸ் யானை?

வேற வழியில்லை. தணிக்கை அதிகாரியிடம் இரண்டு யானைகள் சண்டைபோடுற மாதிரி எடுக்கப்போறோம் அந்த சீனை அனுமதிப்பீங்களான்னு கேட்டதுக்கு முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. விலங்கு நல வாரியம் ஒத்துக்கல. அதான் வேற வழியில்லாம கிராபிக்ஸ் பண்ணினோம்.

* அடுத்து...?

ஜெயம் ரவியோட நிமிர்ந்து நில் படம் பண்ணிக்கிட்டிருக்கேன். அதுலேயும் எனது திறமைக்கு சவாலான வேலை இருக்கு. பொறுத்திருந்து பாருங்க.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

சத்யா - karaikudi,இந்தியா
24 டிச, 2012 - 10:24 Report Abuse
 சத்யா படம் சூப்பர். அருவி காட்சி அருமையா இருந்தது. அந்த இடத்துக்கு போனது மாதிரி இருந்தது.
Rate this:
ரெஜி - chennai,இந்தியா
20 டிச, 2012 - 15:59 Report Abuse
 ரெஜி பெஸ்ட் flim
Rate this:
shiva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
19 டிச, 2012 - 14:07 Report Abuse
shiva அந்த அருவியில் எடுக்கப்பட்ட காட்சி மிகமிகன்றாக உள்ளது
Rate this:
ஜானு - Chennai,இந்தியா
19 டிச, 2012 - 11:04 Report Abuse
 ஜானு Beautiful picturisation,. congrats sugumar. want to see that places in lively.... good movie. All the best to KUMKI team.
Rate this:
மனோஜ்குமார் - Thenni,இந்தியா
19 டிச, 2012 - 08:24 Report Abuse
 மனோஜ்குமார் கும்கி படம் தமிழ் படங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ..... படத்தை பார்த்தவர்கள் அனைவரும் ஒரு பிரமிப்போடதான் வராங்க.... பிரபு சாலமன் சார் க்கு நன்றி
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in