ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திண்டுக்கல் மாவட்டம் பேரணை அருகே எஸ்.மேட்டுப்பட்டியில், விவசாய குடும்பத்தில் பிறந்தவர். உசிலம்பட்டி அரசுப் பள்ளியில் படிப்பு. கனவுத் தொழிற்சாலையான கோடம்பாக்கத்தை மலைக்கவைத்தவர். மண் மணக்கும் கதைகளை வெள்ளித்திரையில் பாய்ச்சுபவர். ஒரே படத்தில் (மாயாண்டி குடும்பத்தார்) 10 டைரக்டர்களை நடிக்க வைத்த துணிச்சல்காரர். அதில், சகோதரர் பாசம், பங்காளிச் சண்டையை அச்சு அசலாக பதிவு செய்தார். "பூமகள் ஊர்வலம், "கோரிப்பாளையம், "முத்துக்கு முத்தாக என, முத்திரை பதித்த ராசுமதுரவனிடம் மதுரையில் நடந்த
நேர்காணல்
* சினிமா ஆர்வம் வந்தது எப்படி?
திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் விவசாய பட்டயப்படிப்பில் சேர்ந்தேன். படிப்பு ஏறவில்லை. முதலாம் ஆண்டோடு முழுக்கு போட்டுவிட்டு, ஏ.வி.எம்., வாஹினி ஸ்டுடியோக்களில் கதை எழுத வேண்டும் என்ற வெறியுடன், சென்னைக்கு பஸ் ஏறினேன்.
* சென்னை எப்படி வரவேற்றது?
சென்னையை சினிமாவில் மட்டும் பார்த்தவன். மேட்டுப்பட்டியில் தெருவுக்கு ஒரு மின்விளக்கு மட்டுமே இருக்கும். அதுவும் உருப்படியாக எரியாது. சென்னையில் முதன்முதலில், 1987 ல் கால்பதித்து, சோடியம் விளக்குகளை பார்த்ததும், எனக்கு புதிராக தெரிந்தது. இங்கே எப்படி, என்ன செய்யப் போகிறோம்? என்ற இனம்புரியாத அழுகையுடன் எனது பயணம் துவங்கியது. ஏ.வி.எம்.,ஸ்டுடியோவில் நுழையவே பல மாதங்கள் ஆனது. டீ கடை, கார்மென்ட்சில் வேலை பார்த்தேன். பல ஆண்டுகள் உதவி இயக்குனராக இருந்தேன்.
* முதல் படம் இயக்கும் வாய்ப்பு...?
முதன்முதலில் ஜெயராம், மீனா நடிப்பில் "மணமகன் தேவை படம் இயக்கினேன். 6 பாடல்கள் பதிவுடன், பணப் பிரச்னையால் படம் பாதியில் நின்றுவிட்டது. மீண்டும் 2 ஆண்டுகள் போராட்டம். அஜித் நடிப்பில் "நம்ம வீட்டு கல்யாணம் 2 பாடல்கள் பதிவுடன், இடையில் நின்றுபோனது. சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி "பூமகள் ஊர்வலம் படம் இயக்க வாய்ப்பளித்தார். பிரசாந்த், ரம்பா நடித்த படம், "மலரே ஒரு வார்த்தை பேசு..., பாடல் பிரபலமானது. எனது தந்தை ராசு,"" என்னப்பா மதுரவன் என பெயரை மாற்றி, எனது "இன்ஷியலை மறந்துவிட்டாயே? என்றார். பின், மதுரவனுக்கு முன் ராசுவை இணைத்தேன். எனது இயற் பெயர் கருப்பையா என்பது பலருக்கு தெரியாது
* அதன் பின் பெரிய இடைவெளிக்கு காரணம்?
9 ஆண்டுகள் வாய்ப்பின்றி, வறுமையில் வாழ்ந்தேன். நடிகர் வடிவேலுவுடன் "போக்கிரி, "திமிரு உட்பட 100 படங்களில் காமடி "டிராக் செய்தேன். லாரன்ஸ், சினேகா நடித்த "பாண்டி 2008 ல் வெளியானது. அதில் வெளிநாட்டு வேலைக்குச் சென்ற கதாநாயகன், தன் தாய் இறப்பிற்கு கூட வர முடியாத துயரத்தை சொல்லியிருந்தேன். "மாயாண்டி குடும்பத்தார் 2009 ல் வசூலை அள்ளியது.
* "மாயாண்டி குடும்பத்தாரில் 10 இயக்குனர்களை களம் இறக்கியது ஏன்?
கிராமத்து கதை என, பெரிய நடிகர்கள் ஒதுங்கினர். பத்து இயக்குனர்கள்களும் முழு ஈடுபாட்டுடன் நடித்தனர். கிராமங்களை விட, நகர்ப்புற தியேட்டர்களில் நல்ல வசூல்.
* மண் சார்ந்த கதைகளில் ஈர்ப்பு ஏன்?
தமிழர் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் இளைய தலைமுறைக்கு தெரியாது. அவர்கள் வாசிப்பதும் கிடையாது. வறுமையின் ஆழம் தெரிந்தவன் நான். பசி தெரிந்த மனிதனுக்கு, எல்லாம் தெரியும். அதுதான் பல நாவல்கள், கதைகளுக்கு தாக்கமாக இருக்கிறது. சிலர், ஆங்கில படங்களிலிருந்து கதைகளை திருடுகின்றனர். மொழி மாற்று படங்கள் எடுக்குமாறு கூறினர். அதற்கு பதிலாக, "ஜெராக்ஸ் கடை வைத்து விடலாம். எனக்கு காப்பியடிக்கத் தெரியாது. நல்ல படங்களுக்கு வரவேற்பு உண்டு. ஜனங்களுக்கு பிடித்ததை செய்வது, படைப்பாளியின் கடமை, இவ்வாறு மனந்திறந்தார்.