ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவின் பிதாமகனாக கருதப்படும் சிவாஜி குடும்பத்தின், மூன்றாவது தலைமுறையும், வெள்ளித் திரையில், தன் காலடியை அழுத்தமாக பதித்துள்ளது. சிவாஜியின் பேரன், பிரபுவின் மகன் என்ற அடையாளங்கள் இருந்தாலும், முழுக்க, முழுக்க, தன் திறமையை மட்டுமே நம்பி, களம் இறங்கியிருக்கும், விக்ரம் பிரபு, தன்னுடைய திரைப்பட அனுபவங்களையும், சொந்த விஷயங்களையும், நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
* தீபாவளி கொண்டாட்டம் பற்றி...?
எனக்கு எப்பவுமே, தீபாவளியை ரொம்ப பிடிக்கும். பாட்டி, அம்மா, தலையில் எண்ணெய் வைப்பாங்க. குளிச்சிட்டு, புத்தாடை போட்டுக்கிட்டு, பெரியவங்க காலில் விழுந்து வணங்கி, ஆசீர்வாதம் வாங்கிட்டு, அடுத்த நிமிடமே, வெடி வெடிக்க போயிடுவேன். கண்டிப்பா... ஒவ்வொரு தீபாவளிக்கும், 10 ஆயிரம் சரவெடி வாங்கிடுவேன். ஒரே கலாட்டாவா இருக்கும். பெரிய மேஜையில், அத்தனை பேரும் உட்கார்ந்து சாப்பிடுவோம்.
* உங்களின் அடையாளம்?
அப்பா பேருடன் சேர்ந்து வரணும்னு தான், என் பெயரை விக்ரம் பிரபு என்று வச்சாங்க. நான் கேரளாவுக்கு "கும்கி பட ஷூட்டிங் போனபோது, தாத்தா ரசிகர்கள், அப்பா ரசிகர்கள் எல்லாரும் என்கிட்ட, ரொம்ப அன்பா பேசுனாங்க. இந்த அடையாளம் கொடுத்தது என் தாத்தா, அப்பா தானே. அது எனக்கு பெருமைதான்.
* உதவியாளராக பணியாற்றியது குறித்து?
அமெரிக்காவில் இருந்து வந்ததும், நம்ம திரைப்படங்களை பற்றி தெரிஞ்சுக்க ஆசை வந்தது. விஷ்ணுவர்த்தன் கிட்ட "சர்வம் படத்தில வேலை பார்த்தேன். அப்பவே, அவர்கிட்ட, "சார் என்னை பத்தி யார் கிட்டேயும் சொல்லாதீங்க. என் நிம்மதி போய் விடும் என்றேன். ஏன்னா, அந்த படத்தில வேலை பார்த்த, அனைவரிடமும், இயல்பா பழகுவேன். அவங்க பார்க்கும் வேலையை தெரிஞ்சுக்கணும்னு ஆசப்பட்டேன். கொஞ்சம் கத்துகிட்டேன்.
* உங்களின் அடுத்த படம்?
"எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்கும், "இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடிக்கிறேன். ஐந்து நாள் ஷூட்டிங் நடத்தினார். சரவணன் கூட வேலை பார்ப்பது, ஒரு சகோதரனிடம் வேலை பார்ப்பது போல் உள்ளது. அவர், வேலை செய்யும் விதம், கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. "என்ன சார், படத்தின் தலைப்பு, வித்தியாசமாக இருக்கிறதே என, அவரிடம் கேட்டேன். ஆனால், படத்தின் கதையை பற்றி, அவர் மூச்சு கூட, விடவில்லை.
* ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது ?
"கும்கி படத்துக்காக, ரொம்ப மெனக்கெட்டு இருக்கேன். பிரபு சாலமன் சார், என்னை நம்பி இந்த ரோல் கொடுத்தார். எங்க வேலைய சிறப்பாக செய்து, உங்களிடம் கொடுத்து விட்டோம். நீங்கள் தான், படத்தை வெற்றியடையச் செய்யணும். எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.