Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

விலாசமின்றி இருந்தேன்... ஆனா இப்போது....! மனம் திறக்கிறார் கங்கை அமரன்

07 அக், 2012 - 17:15 IST
எழுத்தின் அளவு:

கிராமத்து மணம் கமழும் திரைப்படங்களை வழங்குவதில், பெயர் பெற்றவர் இயக்குனர் கங்கைஅமரன். தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த சகோதரர்கள், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் கங்கை அமரன். கங்கை அமரன் எவ்வளவோ திரைப்படங்களை எடுத்திருந்தாலும், இவரது "மாங்குயிலே... பூங்குயிலே... சேதி ஒண்ணு கேளு... கரகாட்டக்காரன் படப்பாடல்கள், பட்டிதொட்டி எல்லாம் பிரபலம். கிராமத்து வீதிகளில் வலம் வந்த மனது, சென்னைக்கு சென்றாலும், கிராமியமாய் மணக்கிறது. மண் மணம் வீசும் அவரது பேட்டி இதோ...

கங்கை அமரனிடம் பிரிக்க முடியாதது?

நாங்கள் வளர்ந்த கிராமத்தை, எங்கள் நினைவிலிருந்து பிரிக்க முடியாது. தென் மாவட்டங்களுக்கு வரும் போதெல்லாம்,  பண்ணைப்புரம் சென்று, மலரும் நினைவுகளை "அசைபோட்டு  செல்வோம்.

இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் கங்கை அமரன் ஓர் ஒப்பீடு?

அவர் அண்ணன், நான் தம்பி. அவர் அறிவாளி, அதிகம் பேசமாட்டார்.  அவருக்கு நேர்மாறாக நான், அதிகம் பேசுவேன்.

திரைப்படத்துறையை தேர்வு செய்தது ஏன்?

இசை, கதை மற்றும் பாடல் எழுதுவது எங்கள் குலத்தொழில். அதிகளவில் திரைக்கதை எழுதினேன். அதை படமாக்கும் எண்ணம் வந்ததால், இத்துறையை தேர்வு செய்தேன்.

இசைஞானி ஆகும் ஆசை உங்களுக்கு வந்ததுண்டா? இல்லை உங்களுக்குள் இசை... இயக்கம் என, தனியாக பிரித்துக்கொண்டீர்களா?

அண்ணனுக்கு இசையின் மீது ஆர்வம் அதிகம். அவர் இசைஞானியானார். எனக்கு, கிராமத்து கதைகள் மீது ஆர்வம் வந்ததால், திரைப்பட இயக்குனர் ஆனேன். அவ்வளவு தான்.

40 ஆண்டுகளுக்கு முன் கங்கை அமரன் எப்படி இருந்தார். தற்போது எப்படி உள்ளார்?

40 ஆண்டுகளுக்கு முன் விலாசமின்றி இருந்தேன். திரைப்படத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு, இயக்குனர்களை சந்தித்தபோது, இயக்குனர்கள் "பிஸியாக இருப்பதை பார்த்துள்ளேன். சொந்த முயற்சியால், பெரிய அளவில் படங்கள் எடுத்து முன்னேறினேன். இன்றைக்கு, நம்மிடம் வாய்ப்புக்கேட்டு வருவோரைப்பார்த்து, எனது முந்தைய வாழ்க்கையை அசைபோட்டு பார்ப்பேன். "எதைத் தேடுகிறோமோ, அது கிடைத்தே தீரும்,.

உங்கள் வாரிசுகளின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என் வாரிசுகள், என் பெயரை மட்டுமே உபயோகிக்க முடியும். அவர்களுக்கென்று திறமை இருந்தால் மட்டுமே, வளர முடியும். அதை அவர்கள் நன்கு உணர்ந்து செயல்படுகின்றனர்.

எதிர்கால திட்டம்?

எங்கள் தொழிலை பொருத்த மட்டில், "வெயில் அடித்தால் காய வேண்டும், "மழை பெய்தால் நனைய வேண்டும்,. பாடகர் ஜேசுதாசுடன் இணைந்து, பல ஆல்பங்களை தயாரித்துள்ளேன். இன்னும், ஆல்பங்கள் தயாரிக்கப்படும்.

அரசியலில் குதிக்கும் எண்ணம் உண்டா?


திரைப்படத்துறை தான் என் மூச்சு. அதை விடுத்து எம்.பி., எம்.எல்.ஏ., ஆக வேண்டும். அரசியலுக்கு  வரவேண்டும் என்ற ஆசை, "எள்ளளவும் இல்லை. நமக்கு தெரிந்த வேலையை செய்தால் போதும். நிறைய "ஆல்பம் வந்து கொண்டிருக்கிறது. அதை முழு ஈடுபாட்டுடன் செய்கிறேன்.

சினிமாத் துறையின் இன்றைய நிலை என்ன?

சினிமாவில், "டெக்னிக்கல் தான் வளர்ந்துள்ளது. கதைகள் "உணர்வுப்பூர்வமாக இல்லை.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

naga - madurai,இந்தியா
08 அக், 2012 - 13:40 Report Abuse
 naga கேவலம்
Rate this:
christ - chennai,இந்தியா
08 அக், 2012 - 10:59 Report Abuse
 christ நீங்க இருந்த காலங்களில் சினிமா ஆரோக்யமாக இருந்தது உண்மை .இப்ப வர படங்களில் கதையும் இல்லை காட்சி அமைப்பும் நன்றாக இல்லை !
Rate this:
Krish - Singapore,இந்தியா
08 அக், 2012 - 08:45 Report Abuse
 Krish அப்படியே மனம் திறந்து.. எந்த எந்த இசை அமைப்பாளரை கேலி செய்தீர்கள், எந்த வாரிசு பாடகருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்தீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள். இப்போ இருக்கும் நிதானம், சாந்தம், அன்று இருந்திருந்தால், முக்கிய இயக்குனர்கள் உங்களை விட்டு விலகி சென்றிருக்க மாட்டார்கள். நீங்கள் இசை அமைத்த காலத்தில் தான் உணர்ச்சி பொங்க படம் எடுத்தார்கள் என்று சொல்வது, உண்மையா இல்லையா என்பது மக்களுக்கு தெரியும்
Rate this:
meena - singapore,சிங்கப்பூர்
08 அக், 2012 - 06:50 Report Abuse
 meena ஆட்டம் என்ற பெயரில் குதித்தல், இசைக் கருவிகளின் இரைச்சல் வன்செயல் பெண்களும் அறிவியல் கருவிகள் ஆர்ப்பாட்டம். உணர்வுப்பூர்வமான கதைகள் இல்லை. இக்குறையை இவர் நீக்கட்டும்!
Rate this:
அலன் ஆனந்தன் - drancy,பிரான்ஸ்
08 அக், 2012 - 00:40 Report Abuse
 அலன் ஆனந்தன் எனது நண்பர் ஒளிவு மறைவு இல்லாமல் பேசக்கூடியவர். ஒரு சில ஆண்டுகள் ஓய்வில் இருந்தார். இப்போது அவரது சக்கரம் சுழல ஆரம்பித்துள்ளது. மேலும் சிறப்புடன் உயருவார்.அலன் ஆனந்தன்-france
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in