‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
தொப்புள் கொடி என்பது தாய்க்கும், குழந்தைக்குமான ஒரு புனிதமான உறவு சொல்லும் அடையாளம் என்கிறது நமது கலாச்சாரம். கருவில் குழந்தை உருவாகும்போது தாயின் உடம்பிலிருந்து குழந்தைக்கு தேவையான சத்துக்கள் கொண்டு செல்லப்படும் பாதை தொப்புள் கொடி, என்கிறது விஞ்ஞானம். ஆனால் தமிழ் சினிமாதான் ஒரு பெண்ணின் தொப்புளை பாலியல் உணர்வின் அடையாளமாக பார்த்தது. வேறெந்த உலக கலையும், சினிமாவும், தொப்புளை கவர்ச்சியின் அடையாளமாக சொன்னதில்லை. காட்டியதில்லை. அப்படிச் செய்த பெருமை தமிழ் சினிமாவைத்தான் சேரும். தமிழ் சினிமாபை பார்த்து பிற்காலத்தில் தெலுங்கு சினிமாவும், மலையாள சினிமாவும் கெட்டுப்போனது.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் என்ற ஒரு இனம் உருவான பிறகுதான் சினிமா கேமராக்கள் நடிகைகளில் தொப்புளை உற்றுப் பார்க்க ஆரம்பித்தது. அதற்கு முன்பு தொப்புள் தெரியும்படி சேலை கட்டுவதுகூட ஆபாசமாக பார்க்கப்பட்டது. தொப்புளை அங்கம் அங்கமாக முதலில் காட்டிய புண்ணியம், ஹேமமாலினி, ஜோதி லட்சுமியை சாரும். அவர்கள் திரைமுழுக்க தொப்புளை காட்டி அதை கவர்ச்சி உறுப்பாக அறிமுகம் செய்து வைத்தார்கள். அதன் பிறகு வந்த சில்க்சுமிதா, அனுராதா தொடங்கி இன்று மும்பையிலிருந்து இறக்குமதியாகும் அயிட்டம் கேர்ள் வரைக்கும் தொப்புளை கவர்ச்சி பொக்கிஷமாக கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் இந்த கவர்ச்சி நடிகைகளையும் தாண்டி ஹீரோயின்களை தொப்புளை காட்டத் தொடங்கினார்கள். ஹீரோக்களும் அதை தொட்டு தொட்டு மகிழ்ந்தார்கள். ஒரு கட்டத்தில் அதுவும் போரடித்துப் போக நடிகையின் தொப்புளை வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று இயக்குனர்களும், ஹீரோக்களும் ரூம் போட்டு யோசித்ததில் பல்வேறு ஐடியாக்கள் கிளம்பி வந்தது. அதை அவ்வப்போது செயல்படுத்தியும் வந்தார்கள். அதில் சில முக்கியமானவை. இந்து படத்தில் பிரபு தேவா ரோஜாவின் தொப்புளில் தேளை விட்டு ரசித்தார். இன்னொரு படத்தில் ஆஃபாயில் போட்டார், தமிழ் நாட்டு மக்களை காக்க வந்திருக்கும் தேசிய முற்போக்கு திராவிடர் கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த், சின்ன கவுண்டர் வேஷம் கட்டி சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் விட்டார். இத்தனைக்கு அவர் அந்தப் படத்தில் ஊர் பெரிய மனுஷன். ஏய் படத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நமீதா தொப்புளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சு குடித்தார்.
பல படங்களில் கடற்கரையில் ஹீரோயினை படுக்க வைத்து மணலை அள்ளி அள்ளி கொட்டினார்கள், பூவை நட்டு வைத்தார்கள், எண்ணை ஊற்றி மகிழ்ந்தார்கள். ஒரு படத்தில் ஹீரோ தொப்புளில் பீரை கொட்டி உறிஞ்சிக் குடித்தார், இப்படி நடிகைகளில் தொப்புளை படாதபாடு படுத்தினார்கள்.
சரி இத்தோடாவது தொப்புளை விட்டு விடுவார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இப்போது நடிகைகளே தொப்புளை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ரகசியா என்ற நடிகை தொப்புளில் விதவிதமான வளையங்களை மாட்டி பயமுறுத்தினார், அவரைத் தொடர்ந்து முமைத்தான் தொப்புள் மட்டுமல்லாது கண் இமை, நாக்கு என்று வளையங்களை மாட்டி மிரட்டினார். இன்றைக்கு சினிமா நடிகைகள் என்றில்லை, சின்னத்திரை நடிகைகள் கூட தொடர்களில் தொப்புள் தெரிய சேலை கட்டித்தான் நடிக்கிறார்கள். த்ரிஷா, ஸ்ருதி, போன்ற முற்போக்கு நடிகைகள் தொப்புளைச் சுற்றி விதவிதமான டாட்டூக்களை வரைந்து திருப்பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்பொது வெளிவர இருக்கும் சவுந்தர்யா என்ற படத்தில் ஹீரோ நடு ஆற்றில் ஹீரோயினை படுக்க வைத்து ஆற்று நீரையெல்லாம் அள்ளி அள்ளி ஊற்றி ஹீரோயின் தொப்புளை நிரப்ப முயற்சிக்கிறார் (அருகில் உள்ள படம்). தமிழ் சினிமாவின் தரமும், களமும் நிறையவே மாறி இருக்கிறது. சர்வதேச தரத்தில் யதார்த்த படங்களை தந்து கொண்டிருக்கிறது. இனிமேலாவது பெண்களின் தொப்புளை விட்டு விடுங்கள் ப்ளீஸ்...