'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டி.எம்.சவுந்தர்ராஜன் எம்.ஜி.ஆருக்கு தனி குரலிலும், சிவாக்கு தனி குரலிலும் பாடுவார் என்பார்கள். அவருக்கு முன்பு அந்தக் காலத்திலேயே நடிகர்களுக்கு ஏற்ற மாதிரி பாடியவர் திருச்சி லோகநாதன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் படமான ராஜகுமாரியில் அவருக்காக பாடினார். மந்திரி குமாரி படத்தில் இடம்பெற்ற வாராய் நீ வாராய் என்ற பாடல் மூலம் பிரபலமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.வி.ரங்காராவ், ஆர்.எஸ்.டனோகர் ஆகியோருக்கு தனித்தனி குரலில் பாடியிருக்கிறார். ஒரு படத்துக்கு பாடல் எழுத இவ்வளவு சம்பளம் என்பதை மாற்றி ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளம் என்பதை உருவாக்கியவர் இவர்தான்.
தூக்கு தூக்கி படத்தில் பாடுவதற்கு ஒரு பாடலுக்கு 500 ரூபாய் சம்பளம் கேட்டா£ர். அது கட்டுபடியாகாது என்று அப்போது புதிதாக அறிமுமாகி வளர்ந்து வந்த டி.எம்.சவுந்தர்ராஜனை ஒரு பாடலுக்கு 100 ரூபாய் கொடுத்து பாட வைத்தார்கள்.
ஜூபிடர் பிக்சர்ஸின் கஞ்சன், வேலைக்காரி போன்ற படங்களில் சிறு வேடங்களில் இவர் நடித்தும் இருக்கிறார். இவருக்கு நடிப்புஆர்வம் இருந்தது. எனினும் திரையுலகத்தில் உள்ளவர்கள் இவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் பாடகராகவே தொடர்ந்தார். பழம்பெரும் நடிகை சி.டி.ராஜகாந்தத்தின் மகள் ராஜலட்சுமி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவரது மகன்கள் டி.எல்.மகாராஜனும், தீபன் சக்கரவர்த்தியும் பிரபலமான பாடகர்கள்.