டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டி.எம்.சவுந்தர்ராஜன் எம்.ஜி.ஆருக்கு தனி குரலிலும், சிவாக்கு தனி குரலிலும் பாடுவார் என்பார்கள். அவருக்கு முன்பு அந்தக் காலத்திலேயே நடிகர்களுக்கு ஏற்ற மாதிரி பாடியவர் திருச்சி லோகநாதன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் படமான ராஜகுமாரியில் அவருக்காக பாடினார். மந்திரி குமாரி படத்தில் இடம்பெற்ற வாராய் நீ வாராய் என்ற பாடல் மூலம் பிரபலமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.வி.ரங்காராவ், ஆர்.எஸ்.டனோகர் ஆகியோருக்கு தனித்தனி குரலில் பாடியிருக்கிறார். ஒரு படத்துக்கு பாடல் எழுத இவ்வளவு சம்பளம் என்பதை மாற்றி ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளம் என்பதை உருவாக்கியவர் இவர்தான்.
தூக்கு தூக்கி படத்தில் பாடுவதற்கு ஒரு பாடலுக்கு 500 ரூபாய் சம்பளம் கேட்டா£ர். அது கட்டுபடியாகாது என்று அப்போது புதிதாக அறிமுமாகி வளர்ந்து வந்த டி.எம்.சவுந்தர்ராஜனை ஒரு பாடலுக்கு 100 ரூபாய் கொடுத்து பாட வைத்தார்கள்.
ஜூபிடர் பிக்சர்ஸின் கஞ்சன், வேலைக்காரி போன்ற படங்களில் சிறு வேடங்களில் இவர் நடித்தும் இருக்கிறார். இவருக்கு நடிப்புஆர்வம் இருந்தது. எனினும் திரையுலகத்தில் உள்ளவர்கள் இவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் பாடகராகவே தொடர்ந்தார். பழம்பெரும் நடிகை சி.டி.ராஜகாந்தத்தின் மகள் ராஜலட்சுமி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவரது மகன்கள் டி.எல்.மகாராஜனும், தீபன் சக்கரவர்த்தியும் பிரபலமான பாடகர்கள்.