Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நயன்தாரா புதிரும் அல்ல... புரியாதவரும் அல்ல... பிறந்த நாள் ஸ்பெஷல்!

18 நவ, 2016 - 10:16 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Nayanthara

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் கிளியோபாட்ரா. 30 வயதை கடந்தும் இன்னும் 18வயது பையனுக்கும் பிடித்த கனவு கன்னி. சினிமாவுக்கு வந்து 10 வருடங்களை தாண்டிவிட்டார். ஆனால் அவர் சிம்மாசனத்தை எந்த நடிகையாலும் தொடமுடியவில்லை. இந்த சாதனையை அவரால் எப்படி நிகழ்த்த முடிந்தது. இது எப்படி நடந்தது... ஒரு சின்ன பார்வை...

கேரளத்து தேவதை டயானா மரியம் குரியன். அழகாக பிறக்கும் எல்லை மலையாள தேவதைகளின் கனவும் தமிழ் சினிமாதான். டயானாவுக்கும் அந்த ஆசை இருந்தது. மனசினக்கரே என்ற படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமானார். அதன் பிறகு இரண்டு படங்களில் நடித்து விட்டவருக்கு அங்கு பெரிய வரவேற்பில்லை. தமிழ் படங்களில் நடிக்க முயற்சி செய்தார். பார்த்திபன் அப்போது இயக்கிய குடைக்குள் மழை படத்துக்கு ஆடிசனுக்கு வந்தார். ஏனோ நயன்தாராவை பார்த்திபனுக்கு பிடிக்கவில்லை ரிஜக்ட் செய்து விட்டார். கஸ்தூரிராஜா தன் படம் ஒன்றுக்கு நயன்தாராவை அழைத்தார் போட்டோ ஷூட் எடுத்துப் பார்த்துவிட்டு கேரக்டருக்கு நீ பொருத்தமாக இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்.

இயக்குனர் ஹரி ஐயா என்ற படத்தை ஆரம்பித்தார். சரத்குமாருக்கு ஜோடியாக கிராமிய தோற்றம் கொண்ட ஒரு நடிகை தேவைப்பட்டார். அப்போது கஸ்தூரிராஜா படத்துக்காக எடுக்கப்பட்ட பாவாடை தாவணி அணிந்த நயன்தாரா போட்டோ அவர் கைக்கு கிடைத்தது. நயன்தாராவை தேடி அழைத்து வந்து நடிக்க வைத்தார்."ஒரு வார்த்த பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்..." ஒற்றை பாடலில் கோடி உள்ளங்களை கட்டிப்போட்டார். அன்று ஆரம்பித்தது நயனனின் பயணம்.

கிராமத்து வேடத்துக்குதான் தான் பொருத்தமானவள் என்பதை உடைக்க கள்வனின் காதலி என்ற படத்தில் கிளாமரில் கலக்கி தனது அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்தார். "குடும்ப பாங்கான பொண்ணு இப்படி நடிக்குதே" என்ற விமர்சனத்தை புறந்தள்ளினார். நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் ஜெனநாதனின் ஈ படத்தில் ஒரு கிளப் டான்சராக நடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
லட்சுமி படத்தின் மூலம் தெலுங்கிற்குள் நுழைந்தவர் அங்கும் வெற்றிக் கொடி நாட்டினார். இதற்கு பிறகான அவரது சினிமா வளர்ச்சி அனைவரும் அறிந்ததுதான்... அவரால் மட்டும் எப்படி 10 ஆண்டுக்கும் மேலாக நம்பர் ஒன் இடத்தை தக்க வைக்க முடிந்தது. அதற்கு ஒரே காரணம் உழைப்பு, தன்னம்பிக்கை என்கிற இரண்டே விஷயம்தான்.

காலை 6 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 5 மணிக்கு மேக்அப்போடு தயாராக இருப்பார். படப்பிடிப்புக்கு சென்று விட்டால் நம்பர் ஒன் நடிகை என்ற கிரீடத்தை முதலில் கழற்றி வைத்து விடுவார். முதலில் தயாரிப்பாளருக்கும், பிறகு இயக்குனருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டுதான் கேரவனுக்குள் செல்வார். தயாரிப்பாளரிலிருந்து செட் அசிஸ்டெண்ட் வரை அனைவருக்கும் ஒரே விதமான மரியாதை தருவார். மேக்அப் போட்டுவிட்டால் வீண் அரட்டை, வெற்றுப்பேச்சு இருக்காது, செல்போனை தொட மாட்டார். கேமரா முன்னால் சென்றால் அந்த கேரக்டராக மாறிவிடுவார். உதவி இயக்குனர்கள் வசனம் சொல்லிக் கொடுத்தால் "அண்ணே இந்த டயலாக்கை ஒருமுறை பேசிக் காட்டுங்கண்ணே" என்பார்.

ஷாட் முடிந்ததும் "டைரக்டர் சாருக்கு திருப்தியா?" என்று கேட்டுவிட்டுத்தான் அங்கிருந்து செல்வார். இப்படி அவரது தொழில் சுத்தம் எந்த நடிகைக்கும் வராது. சீதையாக காவி சேலை உடுத்தியும் நடிப்பார். சிக்ஸ்பேக்ஸ் வைத்து பிகினியிலும் நடிப்பார், நம்பர் ஒன் இயக்குனர் படத்திலும் நடிப்பார், அதிரடியாக புதுமுக இயக்குனர் படத்திலும் நடிப்பார், அதுதான் நயன்தாரா. கேரக்டர் பிடித்துவிட்டால் உடன் நடிப்பது அப்புக்குட்டியாக இருந்தாலும் அவருக்கு பிரச்சினை இல்லை.

பொதுவாக திரையுலகில் ஒரு கருத்து உண்டு... ஒரு படத்துக்கு நயன்தாராவை புக் பண்ணுவது கடினம். புக் பண்ணிவிட்டால் படத்துக்கு பண சிக்கல் என்றால்கூட முதல் ஆளாக நிற்பார். இப்படி அவர் விட்டுக் கொடுத்த சம்பளங்களே கோடிக் கணக்கில் இருக்கும்.

நயன்தாராவை கண்டால் லைட் மேன்கள்கூட எழுந்த நின்று மரியாதை தருவார்கள். காரணம் பல லைட்மேன்கள் குடும்பத்திற்கு விளக்கேற்றி வைத்திருக்கிறார். யாருக்காவாது ஏதாவது பிரச்சினை என்றால் "மேடத்தை பார்த்தியா?" என்றுதான் கேட்பார்கள் அந்த மேடம் நயன்தாரா. அள்ளிக் கொடுப்பதில் அவரைப்போல எந்த நடிகையும் இல்லை. செய்த உதவிகளை பிரஸ் ரிலீசாக வெளியிடத் தெரியாது. இதுவரை நயன்தாராவால் படபிடிப்பு நின்றது, அவரால் படம் தாமதம் என்று ஒரு செய்தியும் கிடையாது. ஆனால் இது விஷயத்தில் அவரை சீண்டிப்பார்த்தால் அவரது இன்னொரு முகம் தெரியும்.

நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பலருக்கும் பல கருத்து இருக்கலாம்... ஆனால் அவரது வாழ்க்கை அப்படியொன்றும் புதிரானதுமல்ல... புரியாததுமல்ல. நயன்தாரா ஒருவரை அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார். நம்பி விட்டால் தன்னை முழுமையாக ஒப்படைப்பார். அதில் சின்ன கீறல் விழுந்தால்கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. வெகு தூரத்திற்கு விலகிச் சென்று விடுவார். அவர் தேடுவது தூய்மையான அன்பை, காதலை. அது ஒரு பெரிய ஹீரோவிடமிருந்து கிடைத்தாலும் சரி.. ஒரு சின்ன இயக்குனரிடமிருந்து கிடைத்தாலும் சரி.

அவர் புகழ்பெற்றவராக இருப்பதால் அவரது வாழ்க்கையை மற்றவர்கள் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறார்கள் அவ்வளவுதான். அவர் நினைத்தால் இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரை துணையாக்கிக் கொள்ள முடியும். ஆனால் அவர் அன்பு நிலைகொண்டு நிற்பது அதிகம் அறியப்படாத ஒரு இயக்குனரிடம். இதுதான் நயன்தாரா... அவர் புதிருமல்ல... புரியாதவருமல்ல...

இன்று அவர் பிறந்த நாளையொட்டி அவர் நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்கள். அறம் இது அவரது படத்தின் தலைப்பு மட்டுமல்ல அவர் வாழ்க்கையின் தலைப்பும் அதுதான்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன்தாரா....! - நீங்களும் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு இங்கு வாழ்த்தலாம்...!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in