ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் முத்துராமன். தனித்த குரல் வளமும், உடல் மொழியும் மிக்க நடிகர். ஒரு நடிகர் ஹீரோவாகவே மட்டும் நடிக்க கூடாது எல்லா கேரக்டர்லேயும் நடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். அதனால் அவர் மல்டி ஸ்டார் படங்களில் நிறைய நடித்துள்ளார். ஆனால் அவர் நெகட்டிவ் கேரக்டர் பண்ணியதில்லை. குறிப்பாக வில்லனாக நடித்ததில்லை.
தொடர்ந்து நடித்து வந்த முத்துராமன் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அப்போது ஏவிஎம் நிறுவனம் இ கட்டாலுன்னாரு ஜாக்கிரதா என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பியது ஏவிஎம் நிறுவனம். . கிருஷ்ணா தயாரித்து நடித்து ஹிட்டான படம். எஸ்.பி.முத்துராமன் இயக்க தெலுங்கு படத்தை தமிழ் நாட்டுக்கு ஏற்ற மாற்றி எழுதிக் கொடுத்தார் பஞ்சு அருணாசலம். ரஜினி, ஸ்ரீதேவி, ராதிகா நடிப்பதென்று முடிவானது. தெலுங்கில் காமெடி கலந்த ஒரு வில்லன் கேரக்டர் மிகவும் பிரபலம். இந்த கேரக்டரில் ஒரு பெரிய நடிகர் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அப்போது முரட்டுக்காளை படத்தில் ஜெய்சங்கரை வில்லனாக்கி வெற்றி பெற்றதைப்போல பவர்புல்லான ஒருத்தரை வில்லனாக்க முடிவு செய்தனர். அவர் முத்துராமன் என்று முடிவானது.
"சினிமாவில் நல்ல கேரக்டர்களில் நடித்து, நன்றாக சம்பாதித்து நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். என்னை போய் ஹீரோகிட்ட அடிவாங்க சொல்றீங்களா?" என்று நடிக்க மறுத்தார் முத்துராமன். இது காமெடி வில்லன்தான். வில்லத்தனம் கொடூரமாக இருக்காது. கடைசியில் வில்லன் நல்லவனாக சுபம்தான் என்று எடுத்து சொன்னதும் ஒப்புக் கொண்டு நடித்தார் முத்துராமன்.