டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பதுபோல, மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கேரளாவையே ஜுரம் பிடிக்க வைத்த மாதிரி, சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கிறது 'புலி முருகன்' படம்.. இன்னும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகள் தொடர்வதால் அதை சமாளிப்பதற்காக சில தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளை திரையிட்டு வருகிறார்கள்.. ரசிகர்களுக்கு சந்தோசம் தான்.. ஆனால் ஒரு சிலருக்குத்தான் இது பொறுக்காதே.. கோலம் பகுதியை சேர்ந்த ஒருவர் உடனே மனித உரிமை கழகத்திற்கு புகாரை தட்டிவிட்டார்.
அதில் தொடர்ந்து விதிமுறைகளை மீறி அதிக காட்சிகளை திரையிட்டு வருவதாகவும், இதற்காக வழக்கமான காட்சி நேரங்களை மாற்றி அமைத்து ரசிகர்களுக்கு சிரமம் தருவதாகவும். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதகாவும் அந்த புகாரில் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். உடனே ஜெட் வேகத்தில் செயல்பட்ட மனித உரிமை கழகம் இந்த புகாரை அப்படியே கேரள அரசுக்கு அனுப்பி வைத்து இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. கேரளா அரசு இது குறித்து கொல்லம் முனிசிபாலிட்டி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது