ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக, இரண்டாவது கதாநாயகியாக மும்பைப் பெண் கேரக்டரில் நடித்த ராகினி நந்த்வனியை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.? 'டேராடூன் டைரி' என்கிற இந்திப்படம் மூலமாக அறிமுகமான இவர்தான், இரண்டு வருடங்களுக்கு முன் மோகன்லாலுக்கு ஜோடியாக 'பெருச்சாளி' படத்திலும் நடித்தவர்... அதைத்தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் அமையாமல் இருந்தவருக்கு 'அப்பாவும் வீஞ்சும்' என்கிற படத்தில் வாய்ப்பு வந்து கடைசியில் ஏனோ தட்டிப்போனது..
இப்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கும் சான்ஸ் தேடி வந்திருக்கிறது. படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டும் இருக்கிறார் ராகினி. படத்தின் பெயர் 'ஹதியா'.. இதில் என்ன ஸ்பெஷல் என்றால், 'பெருச்சாளி' மலையாளப்படம் தான் என்றாலும் அதன் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் தான் நடந்தது.. அதனால் கேரளாவின் அழகை தரிசிக்க முடியாமல் வருத்தத்தில் இருந்தவருக்கு இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே கேரளாவில் நடைபெறுவதால் அந்த மனக்குறை நீங்கியுள்ளது.. கேரளா இவ்வளவு அழகா என வியந்து போயிருக்கிறார் ராகினி.