ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல மலையாள இயக்குனர் சித்திக், கடந்த வருடம் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை இயக்கியதை தொடர்ந்து இந்த வருடம் தனது நண்பர் லால் இயக்கிய 'கிங் லையர்' படத்திற்கு கதை மட்டும் எழுதிக்கொடுத்தார்.. இப்போது தான் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் சித்திக். ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்திற்கு 'ஃபக்ரி' என டைட்டில் வைத்துள்ளார்கள். இந்தப்படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக 'பிசாசு' நாயகி பிரயாகா மார்ட்டின் நடிக்கிறார்.
'பிசாசு' படத்தில் ஒரு காட்சியை தவிர படம் முழுவதும் தனது ஒரிஜினல் முகத்தையே காட்டாமல் நம்மை மிரட்டிய பிரயாகா, தற்போது மலையாளத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.. சில மாதங்களுக்கு முன் இவர் நடித்த 'ஒருமுறை வந்து பார்த்தாயா' படம் வெளியானது. அடுத்ததாக 'ஒரேமுகம்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதுவரை சின்னச்சின்ன படங்களில் நடித்துவந்த பிரயாகாவுக்கு சித்திக்கின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால், தான் எப்படியும் ஒரு முன்னணி நடிகையாகி விடுவோம் என்கிற சந்தோஷத்தில் இருக்கிறாராம் பிரயாகா..