டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளா கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவரும் கேரளாவின் முன்னாள் முதலமைச்சருமான வி.எஸ்.அச்சுதானந்தன் கலையில் மிகுந்த நாட்டமுள்ளவர். அதிலும் சமூகத்துக்கு பயன்படும் விதமான கருத்துக்களை டிவி, சினிமா மூலம் சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பவர்.. அதனால் தான் இயக்குனர் ஜீவன் தாஸ் என்பவர் தான் இயக்கவிருக்கும் 'கேம்பஸ் டைரி' என்கிற படத்தின் கதையையும் அதில் சொல்லப்படவிருக்கும் சமூக கருத்தையும் அவரிடம் சொல்லி, அந்தப்படத்தில் நடிக்கும்படி கேட்க எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டாராம் அச்சுதானந்தன்.
சுற்றச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை என்பதால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் முன்னாள் முதல்வர். கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அவரது நிஜ வாழ்க்கை கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார் அச்சுதானந்தன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன் தனது போர்ஷனுக்கான டப்பிங்கை சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் வைத்து பேசி முடித்துள்ளார் அச்சுதானந்தன்.. இத்தனைக்கும் டெல்லி சென்று திரும்பியவர் பயணக்களைப்பையும் மீறி, ஓய்வை ஒதுக்கிவிட்டு வந்து டப்பிங் பேசிக்கொடுத்தை கண்டு நெகிழ்ந்துவிட்டனராம் படக்குழுவினர்.