மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள நடிகர் தான் என்றாலும் தமிழ்சினிமா தனக்கு அளித்த கௌரவத்தை மனதில் கொண்டு தனது மகன் காளிதாஸை தமிழில் அறிமுகப்படுத்தும் ஆசையில் இருந்த ஜெயராம் பாலாஜி தரணீதரனின் டைரக்சனில் 'ஒரு பக்க கதை'யில் மகனை நடிக்க வைத்தார். சில காரணங்களால் அந்தப்படம் வெளியாகாமல் இருக்க, அடுத்ததாக பிரபுவுடன் சேர்த்து 'மீன் குழம்பும் மண்பானையும்' என்கிற படத்தில் நடிக்க வைத்தார். இந்தப்படமும் ஆடியோ ரிலீஸ் முடிந்த நிலையில் ரிலீஸாக தாமதமாகி வருகிறது.
இந்த நிலையில், சரி.. மலையாளத்திலாவது தனது மகனின் அறிமுக வேலைகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள ஜெயராம், மலையாளத்தில் காளிதாஸ் நடிக்கும் முதல்படமே குறிதப்பாமல் வெற்றிக்கனியை பறிக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது இயக்குனர் அப்ரிட் ஷைனைத்தான்.. யார் இந்த அப்ரிட் ஷைன் என்கிறீர்களா..? நிவின்பாலியை வைத்து '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என தொடர்ந்து இரண்டுமுறை 100 நாள் படங்களை கொடுத்தவர்.. தனது ஹாட்ரிக் சாதனைக்காக துடிப்புடன் தயாராகி வரும் அப்ரிட் ஷைன் படத்தில் காளிதாஸ் அறிமுகமாவது வெற்றிக்கான நூறு சதவீத உத்தரவாதம் என நம்புகிறாராம் ஜெயராம்.