தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த நான்கு வருடங்களாக வெளியாகி வரும் பிருத்விராஜின் படங்களை கவனித்து பார்த்தால் அதில் பெண்களை திட்டுவது போன்றோ, அல்லது மோசமான வசனங்களால் இழிவுபடுத்துவது போன்றோ காட்சிகள் இடம்பெறவே இல்லை என்பதை கண்டுபிடிக்கலாம்... அதற்கு காரணமும் இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார் பிருத்விராஜ்.. தான் நடிகனாக மாறி, முன்னணி நாயகனாக வளர்ந்த காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பஞ்ச் வசனங்களை பேசி நடித்ததை இப்போது நினைத்தால் சங்கடமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார் பிருத்விராஜ்.
குறிப்பாக ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக சில வருடங்களுக்கு முன் தான் நடித்த 'வர்க்கம்' படத்தில் பெண்களை ரொம்பவும் மட்டமான வார்த்தைகளால் திட்டுவதுபோல நடித்திருந்ததை நினைவுபடுத்தும் பிருத்விராஜ், தனது வாழ்விலும் ஒரு பெண் நுழைந்தபின்தான், நிஜத்தில் மட்டுமல்ல, தனது படங்களிலும் கூட அவர்களை மோசமாக சித்திரிக்கும் காட்சிகளில் நடிக்க கூடாது என்கிற முடிவுக்கு வந்தாராம். இதுவரையிலான மலையாள சினிமாவில் இடம்பெற்ற மிகவும் தைரியமான பெண் கதாபாத்திரமாக மோகன்லாலின் 'தேவாசுரம்' படத்தில் ரேவதி ஏற்று நடித்த 'பானுமதி' கேரக்டரை குறிப்பிட்டு தன்னை மிகவும் கவர்ந்த பெண் அவள் தான் என பெருமிதமாக கூறியுள்ளார் பிருத்விராஜ்.