தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
துல்கர் சல்மான் கதாநாயகனாக அறிமுகமானபின் அவரது நடிப்பில் வெளியான மூன்றாவது படம் தான் 'தீவ்ரம்'. டார்க் த்ரில்லர் வகையில் உருவாகி இருந்த இந்தப்படம் கமர்ஷியல் அம்சங்களுடன் இருந்தாலும் துல்கரின் முதல் இரண்டு படங்களைப்போல பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.. அதேசமயம் தயாரிப்பாளர் வி.சி.இஸ்மாயிலுக்கு போட்ட முதலுக்கு நட்டம் இல்லை என்றாலும், பெரிய அளவில் லாபமும் பார்க்க இயலவில்லை. ரூபேஷ் பீதாம்பரன் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். இப்போது லேட்டஸ்ட் தகவலாக துல்கருக்கு தமிழில் இருக்கும் மார்க்கெட்டை பயன்படுத்தி இந்தப்படத்தை 'ஆத்திரம்' என்கிற பெயரில் தமிழில் டப்பிங் செய்து காசு பார்க்கும் வேலைகளில் இறங்கிவிட்டார் தயாரிப்பளார் இஸ்மாயில்.
ஆனால் இதுபற்றி இயக்குனருக்கு தெரிவிக்கவே இல்லை. இந்த தகவலை தாமதமாக அறிந்துகொண்ட இயக்குனர் ரூபேஷ் பீதாம்பரம், “தயாரிப்பாளர் இஸ்மாயிலின் சிறுமையான செயல்பாடுகளை நான் படப்பிடிப்பு நாட்களிலேயே எதிர்கொண்டவன் தான். நான் இந்தப்படம் தமிழில் டப்பிங் ஆவதை தடுத்து நிறுத்தும் வேலைகள் எதிலும் இறங்கப்போவதில்லை.. ஆனால் இயக்குனர்களே, தயவுசெய்து இஸ்மாயில் அடுத்த படம் தயாரிக்க அழைத்தார் என்றால் அது 'Z' கிரேட் படமாக இருந்தாலும் சரி, அவருக்கு யாரும் படம் இயக்கும் காரியத்தை மட்டும் செய்யவேண்டாம்” என தயாரிப்பாளருக்கு சாபமும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.