வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பவன் கல்யாண் ரசிகர்களிடையே நடந்த மோதலில் பவன் கல்யாண் ரசிகர், வினோத் குமார் உயிரிழந்த சம்பவம் டோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(ஆகஸ்ட் 24) கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பவன் கல்யாணின் கட்சியான ஜனசேனாவின் தொண்டரும் அவரது தீவிர ரசிகருமான வினோத் குமார்(24) பங்கேற்று பேசியுள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆரை தாக்குவது போல் அமைந்ததாகக் கூறப்படும் வினோத் குமாரின் பேச்சிற்கு, ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர் அக்ஷ்ய் மற்றும் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாக்குவாதம் முற்றி நடந்த கைகலப்பில் அக்ஷ்ய், வினோத்தை கத்தியால் குத்தியுள்ளார். நெஞ்சில் காயம்பட்ட வினோத் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து அக்ஷ்ய் என்பவரை கைது செய்துள்ளனர்.