துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பொங்கி எழு மனோகரா, சிவனாண்டியும் விருமாண்டியும் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் சைத்தான் படத்தில் நடித்து வரும் அருந்ததி நாயரிடம் சில கேள்விகள்...
ஹீரோ - சப்ஜெக்ட் இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
கதைக்குத்தான் முதலிடம். பெரிய ஹீரோ படம் வந்தால் பண்ணுவேன். கதை ஸ்ட்ராங்காக இருந்தால் சிறிய ஹீரோ படம் என்றாலும் நடிப்பேன். வெயிட்டான கதாபாத்திரங்கள் தான் நடிகைகளை சினிமாவில் நிலைநிறுத்தும் என்பது எனது நம்பிக்கை.
விஜய் ஆண்டனியுடன் நடித்த அனுபவம் குறித்து?
இப்படி பண்ணினா நல்லாருக்கும், அப்படி பண்ணினா நல்லாருக்கும் என அவ்வப்போது டிப்ஸ் கொடுத்தார். அதனால்தான் சைத்தானில் நான் சிறப்பாக நடித்திருப்பதாக கருதுகிறேன். ரிகர்சலே பார்த்ததில்லை. ஸ்பாட்டில் கேட்டு விட்டு உடனே நடிப்பேன். இந்த சைத்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு மனைவியாக நடிக்கிறேன். இரண்டாவது பாதியில் அவர் சைக்கோவாக நடிக்கிறார். இருவருமே அந்த கதாபாத்திரமாக மாறி நடித்தோம். ஓரிரு காட்சிகள் தவிர பெரும்பாலும் ரீடேக் வாங்கவில்லை. சிங்கிள் டேக்கிலேயே ஓகே பண்ணி விட்டேன். மேலும் காட்சிகளில் எனது நடிப்பைப்பார்த்து விஜய் ஆண்டனி பாராட்டினார். எந்தமாதிரியான காட்சி கொடுத்தாலும் உன்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
சைத்தான் உங்களுக்கு திருப்புமுனை படமாக அமையுமா?
நல்ல கதை. அனைவருமே நன்றாகத்தான் நடித்திருக்கிறோம். ஆனால், திருப்பு முனை தருமா? என்பது இப்போது தெரியாது. படம் வெளியான பிறகுதான் தெரியும். ஆனால் படம் ஹிட்டாகும்.
சீரியஸ் நாயகன் விஜய் ஆண்டனி செட்டில் எப்படி இருக்கிறார்?
பொங்கி எழு மனோகரா, சிவனாண்டியும் விருமாண்டியும் படங்களுக்குப்பிறகு நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. இந்த படத்தின் இயக்குனர் முதலில் பிரதீப் முதலில் சீரியசாக இருந்தார். இப்போது ப்ரண்ட்லியாக பேசுகிறார். செட்டில் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார். அதேபோல் விஜய் ஆண்டனியும் செட்டில் ஜாலியாகத்தான் இருப்பார். டென்சனாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சகஜமாக பேசுவார். நானும்கூட அவரது படங்களைப்பார்த்து அவர் சீரியஸாகத்தான் இருப்பாரோ என்று பயந்ததுண்டு. ஆனால் அவர் அப்படியல்ல. ரொம்ப கலகலப்பாக பேசிப்பழகுகிறார்.
புதிய படங்கள் பற்றி?
விதார்த் நடிக்கும் படம் ஒன்றில் கமிட்டாகியிருக்கிறேன். சில படங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளது. சைத்தானுக்குப் பிறகுதான் முடிவு தெரியும். மேலும், மலை யாளத்தில் உன்னிமுகுந்தனுடன் ஒரு படம் வந்தது. சைத்தான் படப்பிடிப்பு இருந்ததால் அதில் நடிக்க முடியவில்லை.
உங்களது ரோல் மாடல்?
நதியா, அசின், நயன்தாரா என பல நடிகைகளை எனக்கு பிடிக்கும். முக்கியமாக அசினை போன்றொரு நடிகையாக ஆசைப்படுகிறேன். மேலும், மலையாளத்தை விட தமிழிலேயே முன்னணி நடிகையாக வேண்டும் என்பது எனது ஆசை.
5.6 அடி உயரம் என்கிறீர்களே. ஆக்சன் ரோல் பண்ணும் ஆசை உள்ளதா?
இதுவரை அப்படியொரு ஆசை இல்லை. காரணம் நான் நடிகையாக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. எதிர்பாராதவிதமாக சினிமாவுக்குள் வந்து விட் டேன். அதனால், ஆக்சன் வேடங்கள் வந்தால் அதில் நடிப்பதா வேண்டாமா என்பது பற்றி அப்போது முடிவெடுப்பேன். எல்லாவற்றையும் காலம்தான் முடிவு செய்யும்.
தமிழ் சினிமாவில் உங்களை கவர்ந்த ஹீரோக்கள் யார் யார்?
ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா என எல்லோருமே பிடிக்கும். எல்லோருடனும் நடிக்க ஆசை. அஜீத் நடித்த வாலியும், விஜய் நடித்த போக்கிரியும் ரொம்ப பிடிக்கும்.
கிளாமர் லிமிட் ?
அந்த மாதிரி படங்கள் வரும்போது அது எனக்கு சூட்டாகும் பட்சத்தில் நடிப்பேன். இப்போது கிளாமர் வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனால் பியூச்சரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் இதை முடிவு செய்யும். ஆனால் கிளாமருக்கு நான் எதிரியில்லை. முக்கியமாக அசின் நடித்தது போன்று எனது கவர்ச்சி எல்லையும் இருக்கும். அந்த மாதிரி கதைகள் வரும்போது அதைப்பற்றி யோசித்து முடிவெடுப்பேன் என்கிறார் அருந்ததி நாயர்.