'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
கோடம்பாக்கத்து வரும் புதுமுகங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஆனால், சிலருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன. சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் நாயகி சாட்னா டைடஸ், ஒரே படத்தில் நல்ல பெயரை பெற்றுள்ளதுடன், தற்போது, மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு:
சாட்னா டைடஸ் பெயருக்கு என்ன அர்த்தம்?
என் அப்பா பெயர் டைடஸ். நான் படித்தது, வளர்ந்தது எல்லாம் கேரளாவில். எங்க ஊரில் உள்ள பெரும்பாலானோர், பெயருடன், குடும்ப பெயரை சேர்த்துக் கொள்வோம். அதனால் தான், சாட்னா என்ற பெயருடன், டைடஸ் என்ற குடும்ப பெயரும் என்னுடன் சேர்ந்து கொண்டது. மற்றபடி, இந்த பெயருக்கு எந்த அர்த்தமும் இல்லை.
சின்ன வயதில் ரொம்ப அலப்பறை செய்வீங்களாமே?
அய்யோ அந்த விஷயம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா... நான் நான்காம் வகுப்பு படிக்கும் போதே, என் தாத்தா பாட்டிகிட்ட இன்றைக்கு டிவில இந்த படம் போடுவாங்க, எனக்கு படம் பார்த்துட்டு ஸ்கூல் விட்டு வந்ததும் கதை சொன்னாத்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்திருக்கிறேன். அதோடு மட்டுமில்லை ஸ்கூல் போயிட்டு வந்து அந்த டீச்சர் எப்டி பாடம் எடுத்தாங்கனு வீட்டில் வந்து எல்லாரையும் உட்கார வைத்து நடித்து காட்டுவேன். சின்ன வயதில் இருந்தே பாட்டு டான்ஸ் என்றால் எனக்கு உயிர், நான் நினைத்த மாதிரியே சினிமாவுக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம்.
பிச்சைக்காரன் படத்துக்கு கிடைத்த வரவேற்பும், அனுபவமும் எப்படி இருந்தது ?
எல்லாரை போல எனக்கும் முதல் பட அனுபவம் மறக்க முடியாதது தான். சிறு வயதிலிருந்தே நிறைய தமிழ் படங்களை பார்த்ததால் மொழி பிரச்னை இல்லை. ஆனால், முதல் நாள் படப்பிடிப்பின்போது, ரொம்ப பதற்றமாக இருந்தேன். அப்புறம், போகப் போக இயல்பாகி விட்டது.
நெஞ்சோரத்தில் பாடல் மிகவும் பிரபலமாகி விட்டதே?
அந்த பாட்டு, என் வாழ்க்கையை மாற்றி விட்டது. குறிப்பிட்ட காட்சிகளில் நடிக்கும்போது, ரொம்பவும் அனுபவித்து நடித்தேன். அந்த பாட்டில் அணிந்து வரும் உடைகள் எல்லாமே, என்னோட தேர்வு தான். எங்கே போனாலும், அனைவரும் என்னை அடையாளம் கண்டு கொள்கின்றனர். இதற்கு, அந்த பாட்டு தான் முக்கிய காரணம்.
உங்க ரோல் மாடல் யார்?
எனக்கு ஜெனிலியா நடிப்பு ரொம்ப பிடிக்கும், ரொம்ப இயல்பா துரு துறுன்னு படத்தில தெரிவாங்க ,
மலையாளத்தில் இருந்து வந்த நடிகைகளில், உங்களுக்கு பிடித்தது யார்?
ஷோபனாவின் நடனமும், நடிப்பும் ரொம்ப பிடிக்கும். பலமுறை ஷோபனாவின் நடிப்பை பார்த்து, பிரமித்து போயிருக்கிறேன்.
நயன்தாரா பற்றி...?
அய்யோ... எனக்கு அவங்க அளவுக்கு வர முடியுமா என தெரியவில்லை. அவங்க இடத்தை அவ்ளோ சீக்கிரம் பிடிக்க முடியாது. நயன், கடின உழைப்பாளி. போராட்ட குணமும் அவங்களுக்கு உண்டு. எனக்கு நயன்தாராவின் கண்கள் ரொம்ப பிடிக்கும்.
புதுமுகங்கள் அதிகமாக திரைத்துறைக்கு வருகின்றனர்; போராடி ஜெயிக்க, நீங்கள் தயாரா?
எல்லாம் கடவுள் கையில் தான் இருக்கு. முடிந்த வரை நடிப்புக்காக என்னை தயார் படுத்தி இருக்கேன். எங்க ஊரில் அழகான பெண்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், எல்லாருக்கும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இது, கடவுள் கொடுத்த பரிசு. கண்டிப்பாக இதை சரியாக பயன்படுத்தி ஜெயிப்பேன்.
சில நடிகைகள் கண்டிஷன் போடுவாங்க, நீங்க எப்படி?
நான் இப்போதுதான் சினிமாவிற்கு வந்திருக்கேன் அதுக்குள் இதெல்லாம் யோசிப்பாங்க, ஆனால் சில விதிகள் எனக்குளே வைத்திருக்கிறேன். எனக்கு கிளாமர் செட் ஆகாது, ரொம்ப மாடர்னா நடிக்க முடியாது, கொஞ்சம் ஹோம்லி தான் செட் ஆகும். அதனால் அந்த மாதிரி கதைகளில் நடிக்க விருப்பம் தெரிவிப்பேன்.
எந்த மாதிரி படங்களில் நடிக்க விருப்பம்?
கஜினி படத்தில், அசின் நடித்தது போன்ற கேரக்டரில் நடிக்க ஆசையாக உள்ளது. நல்ல படங்களாக கொடுத்து, தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பது; மணிரத்னம் சார் இயக்கத்தில் ஒரு படம்; இப்படி, ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.
ஆர்யா கூட நடிக்கிறீங்களாமே?
பிச்சைக்காரன் படத்துக்கு பின், நிறைய கதைகள் வந்தன. ஆனால், திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்திலும், ஆர்யாவுடன் ஒரு படத்திலும் மட்டும் தான் நடிக்க சம்மதித்துள்ளேன். இதுதவிர, தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டேன். மலையாளத்தில் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.