இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தற்போது கேரளா மாநிலம் கொச்சியில் தேசிய அளவிலான கார்ட்டூன் திருவிழா நடைபெற்று வருகிறது. கேரள கார்ட்டூன் அகாடமி ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் சில தினங்களுக்கு முன் அதாவது தனது பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் மோகன்லால். அங்கே இருந்த ஆர்ட் கேலரியை பார்வையிட்ட மோகன்லால், ஸ்மைலிஸ் குறியீடுகள் வரையப்பட்ட பலூன்களை பறக்கவிட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
அப்போது கார்டூனிஸ்ட்டுகளை வாழ்த்தி பேசிய மோகன்லால், “ஓராயிரம் வார்த்தைகள் சேர்ந்து சொல்லவேண்டிய விஷயத்தை ஒரு கார்ட்டூன் சொல்லிவிடும்.. அவ்வளவு ஏன் ஒரு செய்தித்தாள் வாசித்த உணர்வை ஒரு கார்ட்டூனே தந்துவிடும். நம் முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, மிகவும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்டான ஆர்.சங்கர் என்பவரின் கார்ட்டூன்களில் தனது படம் இடம்பிடிப்பதை பெருமையாக நினைத்தார்” என கார்ட்டூனிஸ்ட்டுகளை பாராட்டியதோடு கார்ட்டூனிஸ்ட்டுகளால் தான் அரசியலிலும் சமூகத்திலும் நல்ல மாற்றம் கொண்டுவர முடியும் என்றும் கூறினார்.