தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலகிருஷ்ணாவின் 100வது படமான கௌதமிபுத்ர சதர்கனி படத்தின் பூஜை முடிந்தது முதல் படக்குழு ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிசியாகியுள்ளனர். விரைவில் மொரோகோவில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் பஸ்ட் பிரேம் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தார் தயாரிக்கின்றனர். வரலாற்று திரைப்படமான இப்படத்திற்கென ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணியில் இப்படத்தின் கலை அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன் தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. செப்டம்பர் வரை நயன்தாராவின் கால்ஷீட் கிடைக்காததால் வேறு நடிகையை அனுக க்ரிஷ் திட்டமிட்டுள்ளாராம். நயன்தாரா, அனுஷ்காவிற்கு அடுத்து நாயகி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் ஸ்ருதிஹாசன். க்ரிஷ் மற்றும் படக்குழுவினர் நடிகை ஸ்ருதிஹாசனை இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனராம்