600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாகுபலி 2 திரைப்படம் உருவாகி வருகின்றது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகின்றார். ராஜமௌலி தனது விருப்ப நடிகரான ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு வரலாற்று படம் எடுக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பாகுபலி 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜெயதேவ் ராணா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதே கதாபாத்திரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வேறு ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்கவும் ராஜமௌலி திட்டமிட்டுள்ளாராம். 2017 ஏப்ரல் 14ல் பாகுபலி 2 திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி ஜூனியர் என்.டி.ஆரின் ஸ்டூடன்ட் நம்பர் 1, சிமஹட்ரி, யம டொங்கா போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.