விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
ராஜா ராணி எனும் முதல் படத்திலேயே வெற்றிக் கொடியை நாட்டிய அட்லிக்கு, இரண்டாவது படத்தில் பம்பர் பரிசு கிடைத்தது. விஜய்யை வைத்து தெறி படம் இயக்கும் வாய்ப்பு தான் அது. படம், ரிலீசுக்கான பரபரப்பில் இருந்த அட்லியுடன், ஒரு கலந்துரையாடல்:
* இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு எப்படி சாத்தியம்?
இரண்டாவது படம் என்பதை தாண்டி, நான் எழுதின கதைக்கு விஜய் சார் பொருத்தமா இருந்தார் என்பது தான் உண்மை. எந்த ஒரு இயக்குனருக்கும், விஜய் சாரை வைத்து இயக்க விருப்பம் இருக்கும். எனக்கு இந்த வாய்ப்பு கொஞ்சம் சீக்கிரமே நடந்தது. அதை நான் சரியா பயன்படுத்தி இருப்பதாக நினைக்கிறேன்.
* தெறி படத்தின் கதை என்ன?
மாஸ் - கிளாஸ் இரண்டும் இந்த கதையில் இருக்கும். விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பார்க்கும் படமாக இருக்கும். நல்ல தந்தையாக இருந்தால் தான், நல்ல சுற்று வட்டாரத்தை நம்மால் உருவாக்க முடியும்; இது தான் இந்த படத்தின் ஒன்லைன். படத்தில், சின்ன சின்ன மெசேஜ் இருக்கும். குறிப்பாக, பெண்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும்.
* படத்தில், 'பஞ்ச்' டயலாக் இருக்கா?
பஞ்ச் டயலாக் எதுவும் இருக்காது. அதற்கான அவசியம் கதையில் இல்லை. ஆனால், டயலாக்கே, பஞ்ச் மாதிரி நச்னு இருக்கும்.
* அமைதியான இயக்குனர் மகேந்திரனை, வில்லனாக மாற்றியது எப்படி?
ரொம்ப எதார்த்தமான எளிமையான கதை இது. 'தமிழ் சினிமாவை புரட்டிப் போடும் கதை; யாரும் சொல்லாத கதை' என்றெல்லாம் சொல்ல மாட்டேன். கதைப்படி, ஒரு ஸ்ட்ராங்கான, அதேசமயம் அமைதியாக இருக்கும் கேரக்டருக்கு பொருத்தமானவரை தேடினேன். யாருமே கிடைக்கவில்லை. யாரை நடிக்க வைத்தாலும் வேற ஒரு அடையாளம், வேற ஒரு இமேஜ் இருக்கும். அதனால் எனக்கு மகேந்திரன் சாரை தவிர வேறு சாய்ஸ் இல்லை.
* குருநாதர் ஷங்கரிடம் கற்றுக் கொண்டது, எந்த அளவு உதவியாக உள்ளது?
கதையை உருவாக்குவதில் இருந்து, படம் ரிலீஸ் வரை. எல்லாமே குருநாதரிடம் கற்றது தான். அவரிடம் கற்றுக் கொண்டதை தான், இப்போது என் படங்களில் பயன்படுத்துகிறேன்.
* அஜித் பேசிய டயலாக்கை, விஜய் படத்துக்கு தலைப்பாக்கியது எப்படி?
நான் எப்பவுமே, தெறி என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவேன். அஜித் படம் ரிலீஸ் முன்னாடியே, என் பாடல்கள் எல்லாம் தெறியா வந்திருக்குனு சொல்வேன். நிறைய தலைப்பு யோசித்து, எதுவும் பொருத்தமாக அமையாததால், தெறி என்று வைத்தோம்.